fbpx

மகிழ்ச்சி செய்தி…! மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… நாளை முதல் 16-ம் தேதி வரை சிறப்பு முகாம்…!

பெண்களின்‌ வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத்‌ தரத்தை உயர்த்தி, சமூகத்தில்‌ சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்ட விண்ணப்பங்களைப்‌ பதிவு செய்யும்‌ முகாமை தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம்‌, தொப்பூர்‌ அரசு மேல்நிலைப்‌ பள்ளியில்‌ நடைபெற்ற விழாவில்‌ தொடங்கி வைத்தார்‌. விண்ணப்பப்‌ பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தத்‌ திட்டமிடப்பட்டுள்ளது .

முதற்கட்டமாக 20,765 நியாய விலைக்‌ கடைகளில்‌ இருக்கும்‌ குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல்‌ 04.08.2023 வரை விண்ணப்பப்‌ பதிவு முகாம்கள்‌ நடைபெற்று வருகின்றன. இதில்‌ முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்‌ 04.08.2023 அன்று நிறைவடைய உள்ள நிலையில்‌ இந்த முதற்கட்ட முகாமில்‌ விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்‌ நேற்றும், இன்றும் நடைபெறுகிறது.

நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில்‌ 2,63,472 பேர்‌ விண்ணப்பித்துள்ளார்கள்‌. இந்த முதற்கட்ட முகாம்‌ நடைபெறும்‌ பகுதிகளில்‌ இதுவரை விண்ணப்பிக்காத நபர்கள் இன்று நடைபெறும்‌ சிறப்பு முகாமை பயன்படுத்த வேண்டும். இதுவரை முதற்கட்ட முகாமில்‌ 79.66 இலட்சம்‌ விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டுள்ளன. இதன்‌ தொடர்ச்சியாக இரண்டாம்‌ கட்ட முகாம்கள்‌05.08.2023 முதல்‌ 16.08.2023 வரை நடைபெறவுள்ளன.

Vignesh

Next Post

விவசாயிகளே!… 7 நாட்கள் ஆகியும் இன்னும் பணம் வரவில்லையா?… மத்திய அரசு விளக்கம்!

Fri Aug 4 , 2023
பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி தொகை 7 நாட்கள் ஆகியும் இன்னும் வரவில்லையென்றால், அதற்கான விளக்கத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிஎம் கிசான் […]

You May Like