மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் 1,000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில், இம்மாதம் 2ஆம் கட்ட தொகை வழங்கப்பட உள்ளது. இரண்டாம் கட்ட தொகை 15ஆம் தேதிதான் வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த மாதம் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் இந்த மாதம் 14ஆம் தேதி ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. மாத சம்பளம் வழங்கும் தேதி பொதுவாக வழங்கப்படும் தேதியில் சனி, ஞாயிறு வந்தால் ஒருநாள் முன்னதாகவே சம்பளம் வழங்கப்படும். அதுபோலவேதான் இந்த முறையும் ஒரு நாள் முன்னதாக 14ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த முறை பணம் வழங்குவதில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி, இந்த முறை கூடுதலாக ஒரு சிலருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. கடந்த முறை பெண்களிடம் ஏற்கனவே இருக்கும் வங்கிக் கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிதாக கூட்டுறவு வங்கிகள் மூலம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டது.
இவர்கள் அனைவருக்கும் வங்கி கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில்தான் எல்லோருக்கும் பணம் அனுப்பப்பட்டது. 1.70 கோடி பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து இருந்தனர் தற்போது வரை இந்த திட்டத்திற்கு 1.06 கோடி பேர் இந்த திட்டத்தில் தேர்வாகி உள்ளனர். இதில் வங்கி கணக்கில் சிக்கல் உள்ள சிலருக்கு நேரடியாக மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது. இந்நிலையில்தான் 2ஆம் கட்ட தொகை தற்போது மீண்டும் அனுப்பப்பட உள்ளது. இதில் கூடுதலாக 1-2 ஆயிரம் பேருக்கு இந்த தொகை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.