fbpx

WWE ரசிகர்களுக்கு அதிர்ச்சி.! ஓய்வு குறித்து பேசிய ஜான் சீனா.! எப்போது ஓய்வு.? ரசிகர்கள் கவலை.!

WWE என்று அழைக்கப்படும் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் விளையாட்டுப் போட்டிகளுக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த ரெஸ்லிங் போட்டிகளில் பல பிரபல வீரர்கள் இருந்தாலும் பெரும்பாலான ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரராக இருப்பவர் ஜான் சீனா.

2002 ஆம் ஆண்டு ரெஸ்லிங் போட்டிகளில் அறிமுகமான இவர் 2019 ஆம் ஆண்டு வரை பல்வேறு உலக சாம்பியன் பட்டங்கள் வென்று WWE உலகின் முடி சூடா மன்னனாக விளங்கினார். இவரது ஆட்டத்தை காணவே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு முன்பு போல பெரும்பாலான போட்டிகளில் விளையாடாமல் ஒதுங்கி இருந்தார். மேலும் பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் முடிவில் WWE ரசிகர்களுக்கு சோகமான செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. 2023 ஆம் வருடம் முடிவு பெறுவதை முன்னிட்டு WWE சார்பாக ரசிகர்களுக்கு வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் பேசியிருக்கும் WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா தனது எதிர்காலம் பற்றி பேசி இருக்கும் தகவல் ரசிகர்களை கவலை அடையச் செய்திருக்கிறது.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” WWE வீரராக தன்னுடைய கேரியர் இறுதி நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் விரைவிலேயே ஓய்வு பெறப் போவதாகவும் அறிவித்திருக்கும் அவர் எப்போது ஓய்வு பெறுவேன் என்று முடிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். எனினும் அந்த முடிவு விரைவிலேயே அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். இவரது இந்த வீடியோ வெளியாகி WWE ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது.

Next Post

திருச்சி: பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு.! மெயின் ரோட்டில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம்.!

Sat Dec 30 , 2023
திருச்சி நகரில் பெண் வங்கி ஊழியரிடம் தங்க நகையை பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி கேகே நகர் எல்ஐசி காலனி பகுதியில் உள்ள கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி புஷ்பலதா(44). இவர் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கும் தனியார் வங்கியில் கிளர்காக பணியாற்றி […]

You May Like