fbpx

உங்களையும் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கலாம்..!! ஏன் தெரியுமா..?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையாலும், குறிப்பிட்ட சேவையை நிறுத்தியதாலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ஆயிரம் பணியாளர்களை பிரபல பேடிஎம் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

பிரபல பே.டி.எம். நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்திருப்பதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 10 முதல் 15 சதவிகித ஊழியர்களுக்கு ஆகும் செலவு குறைக்கப்பட்டுள்ளதாகவும், பணியும் சிறப்பாக முடிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பணித்திறன் அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆயிரம் பணியாளர்களை அந்நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கடன் வழங்கும் பிரிவில் பணியாற்றி வந்ததாக தெரிகிறது. குறுகிய தொகை கடன் வழங்குவதை பே.டி.எம். நிறுவனம் நிறுத்தியதன் எதிரொலியாகவும், இப்பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

திருச்சி: திடீரென மாயமான இளம் பெண்.! காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன.?

Wed Dec 27 , 2023
திருச்சி மாவட்டத்தில் கடன் தொல்லையால் இளம் பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரீட்டா மனோன்மணி. இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இவருக்கு பணப் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது இதன் […]

You May Like