fbpx

பிளஸ்2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கலாம்..! அரசுத் தேர்வுகள் இயக்ககம்..!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகியது. இதில், மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

11-ஆம் வகுப்பு மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - அரசுத்  தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - SeithiAlai

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் 14ஆம் தேதி (நாளை) வியாழக்கிழமை முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Notification பக்கத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டலுக்கு வரும் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

“ உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்..” வாட்ஸ்அப் தலைவர் பயனர்களுக்கு எச்சரிக்கை

Wed Jul 13 , 2022
உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தியிடல் தளங்களில் WhatsApp ஒன்றாகும். எனினும் வாட்ஸ் அப் செயலியிலும் பல்வேறு சைபர் குற்றங்கள் அரங்கேறி வருகின்றனர்.. எனவே சைபர் தாக்குதல்களில் இருந்து பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, வாட்ஸ் ஆப் தொடர்ந்து சமீபத்திய பாதுகாப்பு இணைப்புகளுடன் புதுப்பிப்புகளை வெளியிடுகிறது. அசல் வாட்ஸ்அப் பயன்பாட்டில் இல்லாத சில கூடுதல் அம்சங்களைப் பெற, பல பயனர்கள் ‘WhatsApp+’ மற்றும் ‘Hey WhatsApp’ போன்ற மெசேஜிங் தளத்தின் மாற்றியமைக்கப்பட்ட […]

You May Like