இந்திய தேசிய தர நிர்ணய அமைப்பான பி.ஐ.எஸ் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 6467 தர நிர்ணய கிளப்களை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது.
குழந்தைகள் ஒரு வலுவான மற்றும் துடிப்பான இந்தியாவின் சிற்பிகள். நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தர நிர்ணய கிளப்களை உருவாக்கும் பி.ஐ.எஸ், தொலைநோக்குப் பார்வை கொண்ட முன்முயற்சி மூலம், இந்தியாவின் எதிர்காலத்தை அது ஒளிரச் செய்கிறது. தரநிலை மற்றும் அறிவியல் மனப்பான்மையை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இளம் மனங்களில் விதைப்பதை இந்த புதுமையான முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. தரப்படுத்தல் கொள்கைகளில் மூழ்கியுள்ள உணர்வு, விரைவான பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாகும்.
மாணவர்களிடையே தரம், தரநிலைகள் மற்றும் தரப்படுத்தல் குறித்த மதிப்பீட்டை வளர்க்க வேண்டும். நடைமுறைக் கற்றலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பி.ஐ.எஸ், தனது நிதி உதவியை மேலும் நீட்டித்துள்ளது. தகுதி வாய்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், தங்கள் அறிவியல் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்காக அதிநவீன ஆய்வக உபகரணங்கள் வடிவில் ஒரு முறை ஆய்வக மானியமாக அதிகபட்சம் ரூ.50,000/- வரை பெறலாம்.
தர நிர்ணய கிளப்கள் அமைக்கப்பட்டுள்ள அரசு நிறுவனங்களில் ‘மானக் கக்ஷா’ அமைக்க ரூ.1,00,000/- வரை பி.ஐ.எஸ் நிதி உதவி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பள்ளியில் உள்ள ஒரு அறையை ஸ்மார்ட் டிவி, ஒலி ஒளி அமைப்புமுறை, சரியான வெளிச்சம், சுவர்களை அலங்கரித்தல் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இந்த இடங்கள் ஆர்வத்தையும், புதுமையையும் ஊக்குவிக்கும் வகையிலும், எதிர்கால தலைவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட உள்ளன.