பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் பாம்புகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாம்புகளைப் பற்றி நாம் கேள்விப்பட்ட கதைகள் 90% சதவீதம் கட்டு கதைகள். குறிப்பாக சினிமாக்களில் காட்டப்படும் பாம்புக்கதைகளை நம்பவேண்டாம். உலகம் முழுவதும் 3600 வகையான பாம்புகள் இருக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 230 வகை பாம்புகள் உள்ளன. இதில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும்.
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு விரைவாக நகரும் இந்த உயிரினங்கள் எவ்வளவு நேரம் தூங்குகின்றன என்பது மக்களின் மனதில் அடிக்கடி எழும் கேள்விகளில் ஒன்றாகும். பாம்புகள் ஒரு நாளைக்கு சுமார் 16 மணி நேரம் தூங்குகின்றன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர்கள் தங்கள் துளைகளுக்குச் சென்று தூக்கத்தை முடிக்கிறதாம். அது ராட்சத பாம்பு அல்லது மலைப்பாம்பு அல்லது அனகோண்டா இனமாக இருந்தாலும், சுமார் 18 மணி நேரம் தூங்கும். இருப்பினும், குளிர்காலத்தில் இவைகள் தூங்கும் நேரம் மேலும் அதிகரிக்கிறது . அதாவது, குளிர் காலத்தில் பாம்புகள் சுமார் 20 முதல் 22 மணி நேரம் தூங்குகிறதாம்.