fbpx

ஏரியிலிருந்து கைகள் கட்டப்பட்டு அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்! காவல்துறை தீவிர விசாரணை!

உத்திர பிரதேசம் மாநிலத்தின் மதுராவில் கோவர்தன் பகுதியில் உள்ள ஏரியில் இளம் பெண் ஒருவரின் அரை நிர்வாண உடல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள கோவர்தன் பகுதியில் அமைந்துள்ள ஏரி ஒன்றில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் ஏரியில் மிதந்த உடலை மீட்டனர். அதில் இளம் பெண் ஒருவர் அரை நிர்வாணத்தில் அவரது கை மற்றும் கால்கள் தாவணியால் கட்டப்பட்டிருந்தன. அந்தப் பெண்ணின் முகம் ஜாக்கெட்டால் மூடப்பட்டிருந்தது. உடலை மீட்ட காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையை அந்த இளம் பெண் குறித்த தகவல்களை அறிய தீவிரமாக விசாரணை செய்து வருகிறது . இது பற்றிய செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் இளம் பெண் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அவர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவரும். அவரை யார் கொலை செய்து இந்த ஏரியில் கொண்டு போட்டிருப்பார்கள் என்பது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம். விரைவிலேயே உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்போம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இளம் பெண் ஒருவர் ஏரியிலிருந்து அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Baskar

Next Post

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை 200+ ரன்கள்!... அடுத்தடுத்து சாதனைகளை படைக்கும் சிஎஸ்கே சிங்கங்கள்!

Wed Apr 5 , 2023
ஐபிஎல் போட்டிகளில் அதிகமுறை 200 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற சாதனையை எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்துள்ளது. அதன்படி, சென்னை அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளநிலையில், தற்போது 16வது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து அதிரடிக்கும் சரவெடிக்கும் பஞ்சமில்லாமல் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், ஐபிஎல் போட்டிகளில் […]

You May Like