fbpx

ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை..

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவை சேர்ந்த ரமணா என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்..

கோவை வெள்ளையங்கிரி மலையடிவாரத்தில் சத்குருவின் ஈஷோ யோகா மையம் அமைந்துள்ளது.. இங்கு பிரம்மாண்டமான சிவபெருமான சிலை நிறுவப்பட்டுள்ளது.. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர்.. அந்த வகையில், ஆந்திராவை சேர்ந்த 28 வயதான ரமணா என்ற நபர் மன அழுத்தம் காரணமாக யோகா பயிற்சி மேற்கொள்ள ஈஷா மையம் வந்துள்ளார்..

இந்நிலையில் ஈஷா மையத்தில், ரமணா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. தற்கொலை செய்துகொண்ட ரமணாவின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.. அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Maha

Next Post

மருமகனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையில் இருந்து காப்பாற்றிய மாமியார்..! எப்படி தெரியுமா?

Fri Jul 22 , 2022
கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மருமகனை, தண்டனையிலிருந்து காப்பாற்றியுள்ளார் மாமியார். சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு மாமியார் வீட்டில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சுப்பிரமணி, வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து, தனது மாமியாரின் முதுகில் வெட்டியுள்ளார். இதையடுத்து, மாமியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் […]
மருமகனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையில் இருந்து காப்பாற்றிய மாமியார்..! எப்படி தெரியுமா?

You May Like