fbpx

நள்ளிரவு நேரத்தில் நடுரோட்டில் இளைஞர் வெட்டி படுகொலை….! திருநெல்வேலி அருகே பயங்கரம்……!

மாநில அரசு ஒருபுறம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று தெரிவித்து வந்தாலும், மறுபுறம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் முயற்சி செய்கிறதா? அல்லது வெறுமனே அறிக்கைகள் மட்டும் விட்டுக் கொண்டிருக்கிறதா? என்ற சந்தேகம் மிகவும் வலுவாகவே எழுகிறது.

அந்த வகையில், திருநெல்வேலி அருகே உள்ள கீழ வீரராகவபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் முகேஷ் (34). தனியார் உணவு விநியோக நிறுவனம் ஒன்றில் இவர் பணிபுரிந்து இருந்தார் இவருக்கு திருமணம் ஆகி சுபிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன.

இந்த நிலையில், நேற்று இரவு இவர் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது குருந்துடையார்புறம் பகுதியில் முகேஷை திடீரென்று வழிமறித்த ஒரு மர்மகும்பல் அவரை அரிவாளால் சாரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் பலத்த காயமடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து உயிர் இழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் முகேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

அத்துடன் இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து, முருகேஷ், கிரி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

வாடிக்கையாளர்களே..!! இனி யாரும் பணம் கொடுக்காதீங்க..!! அதையும் மீறி கேட்டால் புகார் அளிக்கலாம்..!! மத்திய அரசு அதிரடி..!!

Thu Aug 3 , 2023
சமையல் கேஸ் சிலிண்டர் குறித்து மத்திய அரசு முக்கிய அறிவுரை ஒன்றை பொதுமக்களுக்கு வழங்கியிருக்கிறது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில், இப்போது வரை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. கடந்த மாதமாவது சிலிண்டர் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தக்காளி, அரிசி விலைதான் உயர்ந்தது. இதற்கிடையே, சிலிண்டர் விலையையும் சேர்த்து, சிலிண்டரை டெலிவரி செய்யும் நபர்களுக்கும் பணம் தர வேண்டியுள்ளது. டெலிவரி […]

You May Like