திருச்சி மாவட்ட பகுதியில் அமைந்துள்ள நம்பர் 1 டோல் கேட் அருகில் கூத்தூர் கிராமத்தில் செல்வமணி தனது மகன் அய்யப்பன் (22) வசித்து வருகிறார். மகன் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். நேற்றைய தினத்தில் வீட்டின் அருகில் வசிக்கும் நாகராஜ் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.
துக்க வீட்டிற்கு சென்ற மகன் இறந்த நபரின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு அதற்கு மின் இணைப்பை கொடுக்க முயன்றுள்ளார். இந்த நிலையில் குளிர்சாதன பெட்டியிலிருந்து திடீரென மின்சாரம் அய்யப்பன் மற்றும் அருகில் நின்ற 2 பேர் மீதும் பாய்ந்துள்ளது.
இதனால் தூக்கி வீசப்பட்டு அய்யப்பன் சட்டென்று மயக்கமடைந்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு விரைவாக திருச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு விரைவில் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அய்யப்பன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கொள்ளிடம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் மகன இறப்பினை குறித்து அந்த வாலிபரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.