fbpx

ஜாமினில் வெளியே வந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல்..,…! 5 ஆண்டுகளாக காவல்துறைக்கு டேக்கா கொடுத்த இளைஞர் டெல்லியில் கைது…..!

சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ்(52). தனியார் மருத்துவமனை ஊழியரான இவர் கடன் 2017 ஆம் வருடம் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டு பிணமாக கிடந்தார்.

இது தொடர்பாக கொரட்டூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுவாமிதாசுடன் இருந்த தவறான நட்பின் காரண மாக சுவாமிதாஸ் வீட்டின் பணி பெண்ணாக இருந்த லட்சுமி (32) என்பவர் தன்னுடைய ஆண் நண்பர் முகமது இர்பான்(35) உடன் சேர்ந்து சுவாமிதாசை கொலை செய்தனர் என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, லட்சுமி முகமது இர்பான் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கு நடுவே சிறையில் இருந்து கடந்த 2017 ஆம் வருடம் திணையில் வெளியே வந்த முகமது இர்பான் மற்றும் லட்சுமி உள்ளிட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது மேலும் அவர்களை பிடித்ததற்கு பூந்தமல்லி நீதிமன்றம் அரெஸ்ட் வாரண்ட்டை பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து சென்ற வாரம் கோவையில் பதுங்கி இருந்த லட்சுமியை கொரட்டூர் காவல்துறையினர் கைது செய்தனர் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொரட்டூர் காவல்துறையினர் டெல்லிக்கு சென்று அங்கே முகமது இர்பானை கைது செய்து நேற்று சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Post

தேர்தலில் தோல்வி விரக்தியின் உச்சத்தில் இருந்த நபர்….! ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் நள்ளிரவில் வெடித்த பெட்ரோல் குண்டு…..!

Tue Jun 27 , 2023
அருப்புக்கோட்டை அருகே உள்ள கொப்புசித்தம்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவருடைய மனைவி விஜயலட்சுமி தற்போது ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவர்கள் பந்தல்குடியின் வசித்து வருகின்றனர் வீட்டை ஜெய்சங்கரின் சகோதரி பஞ்சவர்ணம் பராமரித்து வருவதாக கூறப்படுகிறது. கொப்புசித்தம்பட்டியில் தாமரைச்செல்வன் என்பவரின் மனைவி பூரண அபி என்பவர் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இதனால் தாமரைச்செல்வனுக்கும், ஜெய்சங்கருக்கும் முன்பாக இருந்து […]

You May Like