fbpx

இளைஞர்களே..!! கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..? ஆய்வில் அதிர்ச்சி..!!

கொரோனா காலத்தில் கோவாக்சின் (Covaxin) தடுப்பூசி போட்டவர்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ரத்த உறைதல் ஏற்படலாம் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இந்நிலையில், கோவாக்ஸின் தடுப்பூசி போட்டவர்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவாக்சின் (Covaxin) மற்றும் கோவிஷீல்டு (Covishield) ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டன. இதில், கோவாக்சின் தடுப்பூசியை இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் (Bharat Biotech Co) தயார் செய்தது. இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் Covaxin தடுப்பூசி போட்டவர்களுக்கும் உடல்நலம் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட 635 பேர் இளைஞர்கள் உள்பட மொத்தம் 1,024 பேர் கலந்து கொண்டனர். அதனடிப்படையில், கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் மற்றும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது. மேலும், ஆய்வில் கலந்து கொண்ட 47.9% இளைஞர்கள் மற்றும் 42.6 % நடுத்தர வயதினருக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வில் இளைஞர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை

* பொதுவான பிரச்சனைகள் – 10.2% பேர்

* தோல் சம்மந்தமான நோய் – 10.5 % பேர்

* நரம்பு சம்பந்தமான நோய் – 4.7 % பேர்

ஆய்வில் நடுத்தர வயதினருக்கு ஏற்பட்ட பிரச்சனை

* பொதுவான பிரச்சனைகள் – 8.9 % பேர்

* தசை சம்பந்தமான பிரச்சனை – 5.8 % பேர்

* நரம்பு சம்பந்தமான பிரச்சனை – 5.5 % பேர்

குறிப்பாக நடுத்தர வயதினர் 1.6% பேருக்கும், பெண்கள் மற்றும் அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் 2.8 % பேருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்படும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Read More : ’இனி கரண்ட் பில் பிரச்சனையே வராது’..!! ரூ.75,000 மானியம்..!! மின்சாரத்தை விற்றும் லாபம் பார்க்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Chella

Next Post

CSK-க்கு பேரிடி!… நாளைய போட்டியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!… நாடு திரும்புவதால் சிக்கல்!

Fri May 17 , 2024
CSK VS RCB: நாளை நடைபெறவுள்ள பெங்களூரு அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் இருந்து சிஎஸ்கே வீரர் மொயின் அலி விலகவுள்ளார். ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி நாளை (மே 18) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், ஒருபுறம் […]

You May Like