BREAKING | அதிர்ச்சி..!! கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு..!! பீதியில் மக்கள்..!!

Corona 2025 2

சென்னை மறைமலைநகரில் கொரோனா தொற்று பாதிப்பால் 60 வயது முதியவர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. இந்தியாவில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் சற்று அதிகமாகவே இருக்கிறது. பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

இந்த சூழலில் தான், தமிழ்நாட்டிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 60 வயது முதியவர் ஒருவர் இந்த வைரஸால் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மறைமலைநகரை சேர்ந்த முதியவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ்நாடு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Read More : சிறுநீரக பாதிப்பின் முக்கிய அறிகுறிகள்..!! இந்த 2 கீரைகளை கட்டாயம் சாப்பிடுங்க..!! மருத்துவர் சொன்ன சூப்பர் டிப்ஸ்..!!

CHELLA

Next Post

லாபத்தை அள்ளிக் கொடுக்கும் முருங்கை சாகுபடி..!! லட்சக்கணக்கில் வருமானம் பார்க்கும் பெண்..!! சாதித்தது எப்படி..?

Wed May 28 , 2025
இன்றைய காலகட்டத்தில் விவசாயம் செய்து வருவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், ஒரு சிலர் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊரிலோ அல்லது நிலம் வாங்கியோ முழு நேரம் விவசாயம் செய்து வருமானம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது காமினி சிங் என்ற பெண் விவசாயியை பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர், விவசாய விஞ்ஞானி அரசு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக […]
Murungai 2025

You May Like