ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக மும்பை அணியின் நட்சத்திர வீரர் பொல்லார்ட் அறிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியதால் ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பியுள்ளது. பிசிசிஐ-ம் அதற்கேற்ற பணிகளை செய்து வருகிறது. அதாவது 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் மினி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு விருப்பமில்லாத வீரர்களை விடுவிக்கும். அந்தவகையில் வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் விடுவிக்கவுள்ள வீரர்கள் பட்டியலை சமர்பிக்க வேண்டும் என கூறியிருந்தது. எனவே, மும்பை இந்தியன்ஸ் அணி தனது பட்டியலை இறுதி செய்து அனுப்பிவிட்டது. அதில், மும்பை அணியின் மிக முக்கிய வீரரான கெயீரன் பொல்லார்ட்-ம் ஒருவர் என்பது தான் அதிர்ச்சி தகவல். 2010ஆம் ஆண்டு முதல் அந்த அணிக்காக விளையாடி வரும் பொல்லார்ட் திடீரென நீக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் பொல்லார்ட் அறிவித்துள்ளார். மும்பை அணியில் விளையாட முடியாது என்றால், அந்த அணிக்கு எதிராகவும் விளையாட முடியாது. ஆனால், மும்பை & எம்ஐ எமிரேட்ஸ் அணிகளுக்கு பேட்டிங் கோச்சாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு மும்பை அணியில் இணைந்த அவர், தொடர்ந்து ஒரே அணியில் 13 வருடங்கள் விளையாடியுள்ளார். அவர் 189 போட்டிகளில் 3,412 ரன்கள் எடுத்துள்ளார்.