ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மாலை சென்னையில் ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.13,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்று காலையில் சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,040 குறைந்துள்ளது.. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.1,440 விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எனினும் மாலையில் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.. அதன்படி ஒரு கிராம் ரூ.265க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது..
Read More : டீசல் விநியோகம் குறித்து மத்திய அரசின் முக்கிய முடிவு.. கட்டணங்களில் பெரும் குறைப்பு.. மே 1 முதல் அமல்..!


