BREAKING | போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக்கின் கூட்டாளி அதிரடி கைது..!!

ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னையில் தலைமறைவாக இருந்த ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய நண்பர் சதா என்பவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சில அரசியல் மற்றும் சினிமா பிரமுகர்களும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி, தமிழ்நாடு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியாவுக்கு ஜாபர் சாதிக் போதை பொருட்களை கடத்தியுள்ளார். போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமான துறைகளில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு இருக்கிறது. இதுவரை 3 ஆண்டுகளில் 3500 கிலோ சூடோபெட்ரின் எனும் போதை பொருட்களை ஜாபர் கடத்தியுள்ளார்.

Read More : 20 Rupee Note | உங்கக்கிட்ட இந்த ரூ.20 நோட்டு இருக்கா..? அப்படினா நீங்களும் லட்சாதிபதிதான்..!!

Chella

Next Post

Ration | வந்தாச்சு புதிய ரேஷன் கார்டு..!! பெண்களே ரூ.1,000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க ரெடியா..?

Wed Mar 13 , 2024
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் மகளிருக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், பல ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வந்ததாக எஸ்எம்எஸ் சென்றுள்ளது. எனவே, புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள், உடனே மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியுமா? என்பதை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட உடனேயே, அதுவரை ஒரே குடும்பமாக இருந்த பலர், தனி ரேஷன் […]

You May Like