பத்தாம் வகுப்பு முதல்… ₹ 1,12,400 ரூபாய் சம்பளம் வரை எல்லையோர காவல் படையில் 127 வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசு எல்லை காவல் படையில் 127 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இதன்படி தலைமை காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணிகளுக்காக 127 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எல்லையோர காவல் படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் மாதம் 13ஆம் தேதிக்குள் எல்லை ஒரு காவல் படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இந்த வேலை வாய்ப்பிற்கு பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பட்டைய படிப்பு இளங்கலை பொறியியல் மற்றும் தொழிற்கல்வி ஆகிய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 20 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்தப் பணிகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சம்பளமாக 21,700 ரூபாயிலிருந்து 112,400 ரூபாய் வரை வழங்கப்படும் என அந்த இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் எல்லையோர காவல் படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்ப படிவங்களை தரவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 12.0.2.2023 தேதிக்குள் எல்லையோர காவல் படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கு பதிவுத் தொகையாக 200 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ் சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு பதிவு கட்டணத்திலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள https://bsf.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

1newsnationuser5

Next Post

விவசாயிகள் கவனத்திற்கு.. ரூ.2000 பணம் எப்போது கிடைக்கும்...? விரைவில் குட்நியூஸ்..

Thu Feb 16 , 2023
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 பணம் தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்படும். […]
farmer

You May Like