18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்ததாக கூறி அசாம் மாநிலத்தில் மொத்தம் 4,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
குழந்தை திருமணங்களுக்கு எதிரான பெரும் நடவடிக்கையில், 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அது போன்ற நபர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் மொத்தம் 4,004 குழந்தை திருமண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அறிக்கையின்படி, துப்ரி மாவட்டத்தில் 370 அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து ஹோஜாய் (255) மற்றும் உடல்குரி (235) வழக்குகள் உள்ளன. குவஹாத்தி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் குறைந்தது 192 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டிமா ஹசாவ் என்ற மாவட்டத்தில் மிகக் குறைந்த குழந்தைத் திருமண வழக்குகளை பதிவு செய்துள்ளது.
மாநிலத்தில் கடந்த வாரம் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர்; பெண்கள் “தகுந்த வயதில்” தாய்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் அது மருத்துவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றார். குழந்தைத் திருமணங்கள் மற்றும் வயதுக்குட்பட்ட தாய்மையைத் தடுக்க, கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவதற்கும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
18 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் பாலியல் உறவு வைத்திருப்பது குற்றம் என்பதால் அடுத்த 5-6 மாதங்களில் ஆயிரக்கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கடந்த வாரம் எச்சரிக்கை வைத்திருந்த நிலையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட விவரத்தினை முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.