குட் நியூஸ்…! மின்னணு சிம் சேவையை தொடங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம்.‌‌..! முழு விவரம் இதோ…

bsnl annual plans 1721558842 1

பிஎஸ்என்எல் நிறுவனம் மின்னணு சிம் சேவையை தொடங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மின்னணு சிம் எனப்படும் சந்தாதாரரின் அடையாளங்கள் பதியப்பட்ட சிம் கார்டுகளின் சேவை செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கியதாக அறிவித்துள்ளது.இந்தப் புதிய தொழில்நுட்பம் அடிப்படையிலான சேவைகள், இதற்கான வசதிகளுடன் கூடிய மொபைல் சாதனங்கள் மற்றும் பிற சாதனங்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.


இந்தச் சேவை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-சிம் சேவையை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள பிஎஸ்என்எல் நுகர்வோர் சேவை மையத்தை அணுகி கேஒய்சி உட்பட தேவைப்படும் அனைத்து நடைமுறையையும் பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு க்யூஆர் ஸ்கேன் செய்வதன் மூலம் இந்த இ-சிம் சேவையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியும்.

Vignesh

Next Post

ஒரே வீட்டில் தீபாவளி கொண்டாடும் CM ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, விஜய்..!! வைரலாகும் வீடியோ..!!

Tue Oct 14 , 2025
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ‘தீப ஒளித் திருநாள்’ எனப் போற்றப்படும் இந்தப் பண்டிகை, தமிழ்நாட்டில் தனிச் சிறப்புகளுடன், அலாதியான மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே, வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்களின் மனக்கண் முன் நிற்பது சொந்த ஊரும், அங்கே காத்திருக்கும் குடும்பமும்தான். வருடத்தின் இந்த ஒரு நாளுக்காகவே, பெரு நகரங்களில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊரை நோக்கி படையெடுப்பார்கள். தீபாவளி பண்டிகை என்பது, நரகாசுரனை […]
Diwali 2025 2

You May Like