சென்னை வரும் பேருந்துகள் நிறுத்தம்..!! போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு..!! பயணிகள் கடும் அவதி..!!

மாண்டஸ் புயல் காரணமாக, இசிஆர் வழியாக சென்னை வரும் புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


‘மாண்டஸ்’ புயல் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே, மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று புயல் கரையை கடக்கும் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வரும் பேருந்துகள் நிறுத்தம்..!! போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு..!! பயணிகள் கடும் அவதி..!!

இந்நிலையில், சென்னை வரும் புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இசிஆர் சாலை வழியாக சென்னை வரும் புதுச்சேரி பேருந்துகள் மற்றும் காரைக்கால் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரானதும் மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

பான் கார்டு எடுத்து விட்டீர்களா? இதை செய்தால் போதும் சில மணி நேரங்களில் டிஜிட்டல் பான் கார்டு உங்கள் கையில்!

Fri Dec 9 , 2022
கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது. சர்வ சாதாரணமாக, ஒரே இரவில் இப்படியான மிகப்பெரிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் கூலி தொழிலாளர்கள் வரை அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். அதன் பிறகு பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக நாட்டில் உள்ள வங்கிகளில் மக்கள் கூட்டம் […]
1008487 pan card

You May Like