அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை..!! மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு..!!

அமைச்சர் செந்தில் பாலஜிக்கு இன்று பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெறும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.


அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போக்குவரத்துத்துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளதால உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில், இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பை நீக்குவதற்கு இன்று மாலையே அறுவை சிகிச்சை நடைபெறும் என ஓமந்தூரர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

CHELLA

Next Post

திருச்சியில் ரயிலை கவிழ்க்க திட்டம்..!! தண்டவாளத்தில் லாரி டயர்கள்..!! இதுதான் உண்மை..!! வெளியான பரபரப்பு வாக்குமூலம்..!!

Wed Jun 14 , 2023
திருச்சியில் ரயிலை கவிழ்க்கும் நோக்கில் தண்டவாளத்தில் லாரி டயர்கள் வைக்கப்பட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. திருச்சி – சென்னை ரயில் வழித்தடத்தில் வாளாடி அருகே கடந்த 2ஆம் தேதி இரவு தண்டவாளத்தின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த 2 கனரக வாகன டயர்கள் மீது கன்னியாகுமரி விரைவு ரயில் மோதி நின்றது. இந்த விவகாரம் தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், பெரியார் நகரை சேர்ந்த வெங்கடேசன், […]
திருச்சியில் ரயிலை கவிழ்க்க திட்டம்..!! தண்டவாளத்தில் லாரி டயர்கள்..!! இதுதான் உண்மை..!! வெளியான பரபரப்பு வாக்குமூலம்..!!

You May Like