உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ’டீ’ குடிக்கலாமா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

பெரும்பாலான மக்கள் ’டீ’ பிரியர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. காலை, மாலையில் உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி கொடுப்பதற்கு டீ அவசியமாகிறது. தற்போதைய கோடை காலத்திலும் கூட குளிர்பானங்களை தவிர்த்து, டீ-க்கு முன்னுரிமை கொடுப்பவர்களே அதிகம். அதே சமயம், உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு டீ எதிரியாக அமைகிறதாம். தினசரி டீ அருந்துவதால் உடல் எடை குறைப்பு நடவடிக்கைக்கு பல வகைகளில் சிக்கல் வருகிறதாம்.


இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில், “உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும்போது டீ அருந்துவது நல்லதா அல்லது கெட்டதா என்ற கேள்விதான் எங்களிடம் மிக அதிகமாக கேட்கப்படுகிறது. இதைச் சொல்வதால் பலருக்கு வருத்தம் ஏற்படக் கூடும். ஏனென்றால் டீ அருந்துவது நல்லதல்ல. பக்குவமான முறையில் டீ அருந்த தவறினால் உடல் எடை குறைப்பு முயற்சி தடைபடும்’’ என்று தெரிவித்தார்.

மோசமான விளைவுகள் :

டீ மட்டுமல்ல, டீயுடன் ஸ்நாக்ஸாக நாம் எடுத்துக் கொள்கின்ற சிற்றுண்டிகளாலும் உடல் எடையை குறைக்கும் முயற்சி தடைபடுகிறது. குறிப்பாக பாலுடன், டீ சேர்த்து சாப்பிடுவது மிக மோசமான கலப்பாக உள்ளது. உங்கள் குடலில் அதிக கொழுப்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கும் தன்மை டீ-க்கு உண்டு. புரதம் நிறைந்த பாலை சேர்த்துக் கொள்வதால் கொழுப்பு உறிஞ்சும் திறன் குறைகிறது.

அதிகப்படியான சர்க்கரை :

டீ நல்ல தித்திப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக சர்க்கரையை பலரும் சேர்த்துக் கொள்கின்றனர். சர்க்கரையில் மிகுதியான கலோரிகள் உள்ளன. இதனால் உடல் எடை குறைப்பு முயற்சிக்கு பலன் கிடைக்காது. பொதுவாக சர்க்கரை நிறைவாக சேர்த்து 4 அல்லது 5 முறை டீ அருந்தினாலே, அது ஒருவேளை உணவுக்கு சமமானதாகும்.

ஸ்நாக்ஸ் :

வீடாக இருந்தாலும், கடையாக இருந்தாலும் அல்லது அலுவலகம் என்றாலும், டீ-யை மட்டும் தனியாக அருந்தினால் நமக்கு முழு திருப்தி கிடைக்காது. இதனால் பிஸ்கட், வடை, சமோசா என்று ஏதோ ஒரு மாலை நேர சிற்றுண்டியை சாப்பிடுவோம். இதனால் உடல் எடை குறைப்பு முயற்சிக்கு உரிய பலன் கிடைக்காமல் போகிறது.

டீ அருந்தவே கூடாதா..?

பல எதிர்மறை விளைவுகளை கொண்டிருப்பதால் டீ அருந்தவே கூடாதா என்ற கேள்வி உங்கள் மனதில் எழக் கூடும். ஆனால், இஞ்சி, ஏலக்காய் அல்லது லவங்கப்பட்டை போன்றவற்றை கொஞ்சமாக சேர்த்துக் கொண்டு டீ அருந்தலாம். தூங்க செல்லும் நேரத்தில் டீ அருந்தினால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.

CHELLA

Next Post

தாய்க்காக ரூ.5 கோடி செலவில் தாஜ் மஹால் வடிவில் நினைவில்லம்

Sat Jun 10 , 2023
வயது மூப்பின் காரணமாக பெற்ற தாய் தந்தையரை பராமரிக்க இயலாமல் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு தான், தன் மனைவி, குழந்தைகள் உண்டு என்று சுயநலமாக மாறிப்போன மனிதர்கள் வாழ்கின்ற காலத்தில் தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய அம்மாவிற்கு 5 கோடி ரூபாய் செலவில் தாஜ்மஹால் வடிவில் மகன் நினைவு இல்லம் கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பனில் அரங்கேறி உள்ளது.திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை பூர்விகமாகக் கொண்ட […]
WhatsApp Image 2023 06 10 at 16.37.45

You May Like