தாய்ப்பாலின் சுவையை மாற்றும் கேரட்…! யார் யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

கேரட், ஒரு சத்தான காய்கறி என அனைவரும் அறிந்ததே. பொரியல் முதல் ஜூஸ் வரை பலவகையில் பயன்படுத்தப்படும் கேரட், கண் பார்வை மேம்பாடு, எலும்பு வலிமை, மாலைக்கண் போன்றவற்றுக்கு நன்மை தருகிறது. ஆனால், எல்லோருக்கும் இது ஏற்றது அல்ல. சிலருக்கு, குறிப்பிட்ட உடல்நிலை காரணமாக, கேரட் மற்றும் அதனுடைய ஜூஸ் தீமைகளை ஏற்படுத்தக்கூடும்.


நன்மைகள்: கேரட்ஜூஸ் தினமும் குடித்து வந்தால் கண்பார்வை நன்றாக தெரியும் அதே போல கண்புரை நோய் வராமல் தடுக்க முடியும்.தினந்தோறும் கேரட் ஜூஸ் குடிப்பவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து அதன் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.அதுமட்டும் இன்றி கேரட்டை தினமும் சாப்பிட்டால் மாலைக்கண்நோய் விரைவில் குணம் பெறும்.

தீமைகள்: கேரட்டில் அதிகமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால் அளவோடு சாப்பிட வேண்டும். அப்படி இல்லை என்றால் பக்க விளைவுகள் ஏற்படும் இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கேரட் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்று கூறப்படுகிறது.

தவிர்க்க வேண்டியவர்கள்:
அலர்ஜி உள்ளவர்கள்: சிலருக்கு கேரட்டில் உள்ள இயற்கை வேதிப்பொருட்கள் தோல் ரேஷ், வீக்கம், வயிற்றுப் போக்கு போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். இவ்வாறு உடல் எதிர்வினை காட்டும் போது கேரட்டைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள்: கேரட்டின் கிளைசெமிக் குறியீடு (GI) அதிகமாக இருப்பதால், இது உடலில் ரத்த சர்க்கரையை வேகமாக உயர்த்தும். எனவே, சர்க்கரை நோயாளிகள் சிக்கனமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இவர்கள் வேகவைத்த கேரட் பயன்படுத்துவது சிறந்தது.

பாலூட்டும் தாய்மார்கள்: கேரட் ஜூஸ், தாய்ப்பாலின் சுவையை மாற்றக்கூடும் என கூறப்படுகிறது. அதனால், அதிகளவில் கேரட் ஜூஸ் குடிப்பதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

ஹார்மோன் சமநிலை பிரச்சனை உள்ளவர்கள்: கேரட்டில் உள்ள சில வேதிப்பொருட்கள் ஹார்மோன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடல் மற்றும் பித்தப்பை பிரச்சனைகள் உள்ளவர்கள்: சிலருக்கு கேரட் ஜூஸ் அதிகப்படியான உடல் வெப்பத்தை ஏற்படுத்தும். இது ஜீரணக் கோளாறுகளை தூண்டக்கூடும்.

பூச்சிக்கொல்லி பதப்படுத்தலுக்கான அபாயம்: கேரட்டில் நவீன வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி கலப்புகள் சில ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் புற்றுநோய், நரம்பியல் சிக்கல், வளர்ச்சி பாதிப்பு, ஹார்மோன் தடுப்பு போன்றவை ஏற்படக்கூடும். எனவே நன்கு கழுவிய, நம்பகமான விற்பனையாளரிடம் இருந்து வாங்குவது அவசியம்.

இரண்டு வயதிற்கு கீழுள்ள குழந்தைகள்: இந்த வயதில், கேரட் சாறில் உள்ள சத்துக்கள் மற்றும் வேதிப்பொருட்கள் அவர்களது உடலில் எதிர்வினையை உருவாக்கக்கூடும். பாதுகாப்பாக இருக்க இதனை தவிர்க்கலாம்.

திடீரென கேரட்டை நிறுத்தும் போது: நீண்ட நாட்களாக சாப்பிட்டுவரும் நிலையில் திடீரென கேரட் சாப்பிடுவதை நிறுத்தினால், தூக்கமின்மை, ஏப்பம், பதற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

கேரட் ஜூஸ் பல நன்மைகள் கொண்டது எனினும், சிலருக்கு அது சரிவரச் சேராது. உங்கள் உடல்நிலையைப் பொருத்து, மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே கேரட் ஜூஸ் அல்லது கேரட் உணவை தினசரி உணவில் சேர்க்கவும்.

Read More: சிறுநீரக பாதிப்பின் முக்கிய அறிகுறிகள்..!! இந்த 2 கீரைகளை கட்டாயம் சாப்பிடுங்க..!! மருத்துவர் சொன்ன சூப்பர் டிப்ஸ்..!!

English Summary

Carrots change the taste of breast milk…! Who should avoid them?

Newsnation_Admin

Next Post

உங்க மொத்தை, ஷோஃபா ரொம்ப அழுக்கா இருக்கா?. ஷாம்பு, கற்பூரம் போதும்!. இதோ சூப்பர் ஐடியா!

Thu May 29 , 2025
நாம் எல்லோர் வீட்டிலும் படுக்கை அறையில் இருக்கும் மெத்தை அழுக்காக தான் இருக்கும். ஏனென்றால் அதை எடுத்து நம்மால் துவைக்க முடியாது. அடிக்கடி மெத்தையை மாற்றவும் முடியாது. வேக்யூம் கிளீனர் இருந்தால் இந்த மெத்தைக்கு மேலே இருக்கக்கூடிய அழுக்கை எளிமையான முறையில் சுத்தம் செய்து விடலாம். ஆனால் எல்லோர் வீட்டிலும் வேக்யூம் கிளீனர் இருக்காது. மெத்தை, சோஃபா இந்த இரண்டு பொருட்களையும் சுத்தம் செய்ய எளிமையான ஒரு வீட்டு குறிப்பை […]
dirty bed clean

You May Like