தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குநர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் மாநகராட்சியைப் பொறுத்தவரை 677, நகராட்சியில் 455 என மொத்தம் 1,132 இடங்களில் காலனி மற்றும் சாதி பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், அப்பெயரை நீக்கி, பூக்கள், மரங்கள், இயற்கை, நில அமைப்பு அடிப்படையிலும், நகரின் முக்கியமான அடையாளங்கள் மற்றும் வரலாற்று அடிப்படையிலும், பொது தலைவர்களின் பெயரிலும் பெயர்களை வைக்க வேண்டும்.
பெயர்களை மாற்ற, மாநகராட்சி, நகராட்சிகளில் அந்தந்தப் பகுதியில், பொதுமக்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதனை அந்தந்த உள்ளாட்சி மன்றத்தில் வைத்து மாற்று பெயரினை சூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்கு அந்தத் தெருவில் குடியிருக்கும் பெரும்பான்மை ஒப்புதல் பெறப்பட்டால் போதுமானது. இதனை நகராட்சி நிர்வாக இயக்குநர் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: மணிப்பூரில் மீண்டும் கலவரம்!. துப்பாக்கிச்சூட்டில் பெண் பலி!. மேலும் ஒருவர் படுகாயம்!.