இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களில் ஒருவரான இந்திய விமானப்படையின் (IAF) குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, இன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்தார்.. மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பல முறை இந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.. 1984 ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனின் சல்யுட்-7 விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியாக […]

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து காய்ச்சல் மற்றும் தலைவலிக்கான முக்கியமான மருந்தான பாராசிட்டமாலை தயாரிக்க முடியும் என இங்கிலாந்து எடின்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு காட்டுகிறது. இந்த முயற்சியில் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) எனப்படும் பிளாஸ்டிக் வகையிலிருந்து பாராசிட்டமால் தயாரிக்க எஷ்சரிச்சியா கோலி (E.coli) எனும் பாக்டீரியா பயன்படுத்தப்பட்டது. இது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாகும். இந்த கண்டுபிடிப்பின் மூலம், பாராசிட்டமால் தயாரிக்க தேவையான மூலப்பொருளை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெற […]

இந்தியா எந்த நாட்டில் இருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்கிறது தெரியுமா? நரேந்திர மோடி அரசு பிப்ரவரி 2022க்கு முன்பு ரஷ்யாவிலிருந்து தனது எண்ணெயில் 0.50 சதவீதத்தை மட்டுமே இறக்குமதி செய்து வந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் இந்த அளவு கணிசமாக உயர்ந்து 30–35 சதவீதமாக உயர்ந்தது. பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யா இப்போது இந்தியாவின் முக்கிய எண்ணெய் சப்ளையர்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தற்போதைய […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த அதிர்ச்சி தகவலை ஈரான் நீதித்துறை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து நேற்றைய தினம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த […]

3-ம் உலகப் போர் குறித்த அச்சங்களுக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் உற்பத்தியை அதிகரித்து வருகிறார். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் 3 ஆம் உலகப் போர் குறித்த அச்சங்கள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் உற்பத்தியை அதிகரித்து வருகிறார். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஈரான் தனது […]

இன்ஸ்டண்ட் காபி பார்வை இழப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்..

இந்தியாவின் விண்வெளிப் பயண வரலாற்றில் புதிய அத்தியாயமாக, சுபன்ஷு சுக்லா இன்று விண்வெளிக்கு செல்கிறார். பால்கன்-9 ராக்கெட் மூலம் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4′ என்ற மனித விண்வெளி பயணத்திற்கான ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. இந்த டிராகன் விண்கலம் உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். டிராகன் காப்ஸ்யூல்: […]

இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் அவசரநிலை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.. அவசரநிலையின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அரசியலமைப்பின் உணர்வு எவ்வாறு மீறப்பட்டது, பாராளுமன்றத்தின் குரல் எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்பதை எந்த இந்தியரும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.. இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்கள் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தொடர்ச்சியான பதிவுகளில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். […]

உடல் எடை குறையாமல் இருப்பதற்கு 12 காரணங்கள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஹார்மோன் சமநிலையின்மை, மெதுவான வளர்சிதை மாற்றம், தூக்கமின்மை, கார்டிசோல் மற்றும் குடல் சுகாதார பிரச்சினைகள் ஆகியவை முக்கியமானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உணவைக் கட்டுப்படுத்தி, தினமும் நடைப்பயிற்சி செய்து, நீரிழிவு, கொழுப்புச்சத்து போன்றவை கவனித்தும் எடை குறையாமல் தவிக்கிறீர்களா? உங்கள் முயற்சிகள் பலனளிக்காததற்குப் பின்னால் சில ஆழமான உடல்நலப் பிரச்சினைகள் இருக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். […]