பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைக்க தொடங்கியுள்ளார். பாஜக காஷ்மீரி பண்டிட்களை தங்கள் வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்துகிறது என்று கூறினார். பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது, “இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பாக இல்லாமல் வெறும் […]

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கலைஞருமான புலக் கோகோய், குவஹாத்தியில் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு 84 வயது. அஸ்ஸாம் முதல்வர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார், “கலாச்சார உலகின் முக்கிய நபரான புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும் புகழ்பெற்ற ஓவியரும் கார்ட்டூனிஸ்டுமான புலக் கோகோய் காலமானார் என்ற செய்தியால் நான் வருத்தமடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார். […]

தேசிய தலைநகரில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பலர் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறினர். ஆரம்ப அறிக்கையின்படி, நடுக்கம் கிட்டத்தட்ட 5 வினாடிகள் நீடித்தது. நொய்டா மற்றும் குருகிராம் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது மற்றும் […]

திரைப்பட விளம்பரங்களில் கட்டாயம் சான்றிதழ் வகையை குறிப்பிட வேண்டும் தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பாலமுரளி வெளியிட்ட செய்தி குறிப்பில்: தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு மத்திய சான்றளிப்பு வாரியம் (சிபிஎஃப்சி) வழங்கும் தணிக்கை சான்றிதழின் வகையை விளம்பரங்களில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று சிபிஎஃப்சி அறிவுறுத்தியுள்ளது. சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட […]

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், ‘வரைவு தொலைத்தொடர்பு சேவைகள் இணைப்பு ஒழுங்குமுறை விதிகள் 2022 குறித்து துறைசார்ந்தவர்களிடமிருந்து கருத்துகள், எதிர் கருத்துகளுக்கான கால அளவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. துறைச்சார்ந்தவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான கருத்துகளைப் பெறுவதற்கான கடைசித் தேதி அக்டோபர் 7, 2022 என்றும், எதிர் கருத்துகள் ஏதேனும் இருந்தால், அக்டோபர் 21, 2022 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. துறைச்சார்ந்தவர்களில் சிலர் வேண்டுகோள் விடுத்ததின் பேரில், எழுத்துப்பூர்வ கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 4 […]

யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில்இந்த வாரம் மகேஸ்வரி வெளியேறி இருக்கின்றார். பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் கடந்த ஒரு வாரமாக ராம் பற்றிய பேச்சுக்கள்அடிபட்டது. கடைசி இடத்தில் இருந்ததும் ராம்தான். ஆனால், மகேஸ்வரி வெளியேறி இருப்பது அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விறுவிறுப்பாக சென்ற நிகழ்ச்சியில் வி.ஜே. மகேஸ்வரியும்  நன்றாக விளையாடினார் என்ற பெயரை எடுத்தார். இருந்த போதிலும் எலிமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்து வந்தார். பிக்பாஸ் சீசன் 6ல் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். […]

யூடிபில் பளபளக்கும் மேனியையும் ஆரோக்கியத்தையும் பெற செங்காந்தாள் என்ற செடியின் கிழங்கை சாப்பிடலாம் என்ற தகவலை பார்த்து சாப்பிட்டவர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள கிராமம் மின்னூர். இப்பகுதியைச் சேர்ந்த 25 வயது நபர் லோகநாதன். இவரது நண்பர் நாட்ரம்பள்ளியை சேர்ந்த ரத்தினம் (35) இருவரும் கல் குவாரியில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் செங்காந்தாள் என்ற செடியின் கிழங்கை சாப்பிட்டால் மினுமினுக்கும் […]

நாளை நடைபெற உள்ள பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையேயான டி20 உலக கோப்பை இறுதிச்சுற்று போட்டிக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான்-இங்கிலாந்து மோதும் டி.20 உலக கோப்பை போட்டி இறுதிச் சுற்றுப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மழை வெளுத்து வாங்குகின்றது. அரையிறுதியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதையடுத்து இங்கிலாந்துடன் மோதும் வாய்ப்பை பெற்றது. நாளை இறுதிச் சுற்று நடைபெற உள்ளது. மெல்போர்னில் மழை காரணமாக நாளை […]

டென்னிஸ் நட்சத்தரமான சானியா மிர்சாவும் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் விவாகரத்து செய்வதாக தகவல் வெளியான நிலையில் தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சானியா மிர்சாவும் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் கடந்த 2010ல் திருமணம் செய்துகொண்டனர். இதைத் தொடர்ந்து துபாயில் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்தியாவைச் சேர்ந்த சானியா பாகிஸ்தானின் சோயிப் மாலிக்கைதிருமணம் செய்தது முதலில் இந்திய ரசிகர்கள் எதிர்த்திருந்தாலும் பின்னர் அதை ஏற்றுக்கொண்டனர். […]

நேற்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது ஒரு மணி நேரம் என்ன பேசினோம் என்பதை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு அளித்தனர். மாநிலத் தலைவர் என்ற முறையில் காரில் பயணித்த அண்ணாமலை தன்னுடன் மோடி என்ன பேசினார் என்பதை பகிர்ந்துகொண்டுள்ளார். மாநிலத் தலைவர் என்ற முறையில் என்னை வாகனத்தில் […]