கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சி ஒன்று திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கோயம்புத்தூரில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு குறித்த அரசியல் ஆதாயம் பெறுகின்ற நோக்கில் ஆளுநரும் பாஜகவும் செயல்பட்டு வருவது அதிர்ச்சியாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு எதிரான நபராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்பது பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. அவர் ஆளுநர் என்பதை எல்லாம் மறந்துவிட்டு […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மகாராஷ்டிரா பகுதியில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில காமக்கொடூரர்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளையும் விட்டு வைப்பதில்லை. சில நாட்களாக தொடர்ந்து வளர்ப்பு பிராணிகளுக்கு பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணமாக உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, பவாய் பகுதியில் 25 வயது இளைஞர் ஒருவர் நாய்க்குட்டிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவாய் ஹிரா பென்னா என்ற வணிக […]
வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து வரும் காரணத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று நள்ளிரவு நேரத்தில் தொடங்கிய இந்த கனமழை இன்று காலை வரை விடாமல் பெய்து வருகிறது. இதனால், சென்னையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. அதை அப்புறப்படுத்துகின்ற முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு அருகே பிரகாஷ் ராவ் காலனியில் சாந்தி என்ற பெண் வசித்து வந்துள்ளார். […]
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உலக முக்கிய பணக்காரருமான எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடகத்தை சில நாட்களுக்கு முன் 3.5 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகின்றார். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த பராக் அகர்வால் மற்றும் ட்விட்டரின் முக்கிய தலைமை நிர்வாகிகளை சமீபத்தில் நீக்கினார். இதற்கிடையில், நேற்று அதிகாரப்பூர்வ கணக்கு எனும் […]
மது அருந்துபவர்கள் பலர் தங்களது கல்லீரல் முழுவதுமாக செயலிழந்த பிறகுதான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதுபோன்ற சூழ்நிலையில் உயிரை காப்பாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது. மது அருந்துவதால் கல்லீரல் சிரோசிஸ் என்று சொல்லப்படும் நோய் உண்டாகிறது. இந்நோய் நீண்ட காலத்திற்கு மது அருந்துவதால் ஏற்பட்டு கல்லீரலை சேதப்படுத்திவிடும். மேலும் கல்லீரலை கடினமாக மாற்றி செயல்பட முடியாமல் செய்து, விரைவில் செயலிழக்க வைத்துவிடும். கல்லீரலை பாதுகாக்க […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டமானது சேர்மன் நளினியின் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக துணை சேர்மன் கார்த்திகேயன், சுயேச்சை கவுன்சிலர் சினேகா, பொறியாளர் சண்முகம், கமிஷனர் கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் சுயேச்சை கவுன்சிலர் சினேகா துணை சேர்மன் கார்த்திகேயனை செருப்பால் அடிக்க முயற்சித்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. கடந்த அக்டோபர் 23ஆம் தேதி துணிக்கடையில் வாழ்த்து தெரிவிக்கும் போது சினேகாவின் கணவரை […]
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆய்க்குடியில் பகுதியில் ஸ்ரீபாலசுப்பிரமணியசாமி என்ற கோவில் அமைந்து இருக்கின்றது. இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கி நிகழ்ந்து வந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நேரத்தில் ஆய்க்குடியில் உள்ள சிவன் கோவின் திடலில் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளித்து , சூரபத்மன் உள்ளிட்ட சூரர்களை வதம் செய்தார். இந்நிகழ்ச்சியில், […]
சொந்த வீட்டின் கதவுக்கு தனக்கு பிடித்த கலரில் பெயின்ட் அடித்ததற்காக உரிமையாளருக்கு 19 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..? இந்த சம்பவம் ஸ்காட்லாந்து நாட்டின் ஈடின்பெர்கில் உள்ள வீட்டு உரிமையாளருக்கு நடந்திருக்கிறது. ஈடின்பெர்கின் நியூ டவுனில் உள்ள டிரம்மண்ட் பகுதியில் இருக்கிறது மிராண்டா டிக்சன் (48) என்ற பெண்ணின் பரம்பரை வீடு. 1981ஆம் ஆண்டு டிக்சனின் பெற்றோர் அந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள். அவரது பெற்றோர் மறைவுக்கு […]
சேலம் மாமாங்கத்தில் உள்ள கிளாக்காடு பகுதியில் வசித்து வருபவர் இருசன் என்பவர். இவரது மனைவி நிலா. இவர்களுக்கு ரேஷ்மா, கஸ்தூரி, லோகேஸ்வரி என்ற 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் , மற்ற 2 மகள்களும் கல்லூரியில் படித்து வருகின்றனர். சென்ற ஆண்டு நிலா இயற்கை உபாதை கழிக்க இரவு நேரத்தில் சென்றிருந்த நிலையில், அவரை விஷப்பாம்பு ஒன்று தீண்டியுள்ளது. அதனை தொடர்ந்து , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறிய நிலையில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.ஆனால், தற்போது வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயுவின் விலை குறைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் சிலிண்டர் ரூபாய் 2009 க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தற்சமயம் வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் 116 ரூபாய் 50 பைசா விலை குறைத்துள்ளது. எனவே, தற்போது வணிக பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 1893க்கு விற்பனையாகின்றது. […]