எஸ்பிஐ உள்ளிட்ட 18 வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகளை போலியான செய்தி மூலம் டிரினிக் என்னும் வைரஸ் உங்கள் தரவைத் திருடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உங்களது போனில் ஊடுருவி, வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் OTP போன்றவை முக்கியமான விவரங்களைத் திருடுவதற்கு ஏராளமான வைரஸ் சாப்ட்வேர்கள் உள்ளன. அதுபோன்ற ஒரு மால்வேர் இந்திய வங்கிகளையும் அவற்றின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை திருட மீண்டும் ஒரு மால்வேர் வந்துள்ளது. இது இந்தியாவில் உள்ள […]

புகழ்பெற்ற கல்வியாளரும், ஸ்ரீ வாணி கல்விச் சங்கத்தின் நிறுவனருமான டாக்டர் நீலம் நாராயணம்மா காலமானார். 1927ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பிறந்த இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். டாக்டர் நாராயணம்மா ஒரு மருத்துவராக தனது சேவைகளுக்காக மட்டுமல்லாமல், அனந்தபூர் நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள அவரது சொந்த கிராமமான இல்லூரில் பிற்படுத்தப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக தனது சமூக சேவையை செய்து வந்தார். கில்ட் […]

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் குறைந்தது 70-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் மீது உள்ள நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அறுந்து விழுந்ததில் குறைந்தது 70-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலம் நான்கு நாட்களுக்கு முன்பு பழுது பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் முன்பு மீண்டும் திறக்கப்பட்ட பாலம், மாலை 6.30 மணியளவில் இடிந்து […]

மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில்‌ மத்திய அரசால்‌ சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளஇஸ்லாமியர்‌ , கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தைச்‌ சார்ந்த அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ மத்திய அல்லது மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ 1 முதல்‌ 10 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு […]

நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த குமரி, பலவகையிலும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தது. தியாகம், உயிரிழப்பு, மாபெரும் போராட்டங்கள் என ஏராளமான வரலாறுகளும் அதன்பின்னால் இருக்கிறது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்னர், தாய் தமிழகத்தோடு குமரி இணைந்து 66 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது. தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான […]

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் நவம்பர் 4ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 500 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற ’பொன்னியின் […]

மோர்பி பகுதியின் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 400க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குஜராத்தில் உள்ளது மோர்பி பகுதி . அங்குள்ள ஆற்றைக்கடக்க கேபில் பாலம் கட்டப்பட்டு இருந்தது. அதன் மீது பயணிகள் சென்று கொண்டிருந்தபோதே திடீரென அந்த பாலம் உடைந்து ஆற்றில் மூழ்கியது. இதில் சுமார் 400 பேர் தண்ணீரில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தகவல்அறிந்து வந்த […]

டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில்137 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்கா வெற்றியை தட்டிச் சென்றது. டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 49 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி. சூர்யகுமார் யாதவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில்  133 ரன்கள் அடித்து 134 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் க்ரூப் […]

கள்ளக்குறிச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் இல்லத்திருமணவிழாவில் பங்கேற்றபின் மணமக்களுக்கு ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். மாதிரி வாழக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் உதய சூரியன் இல்லத்தில் திருமண விழா நடைபெற்றத. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்கள் டாக்டர் பர்னாலா- டாக்டர் சங்கவியை நேரில் ஆசிர்வாதம் செய்தார். பின்னர் மணமக்களுக்கு அறிவுரை வழங்கியபோது, ’’ மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். கண்டிப்பாக ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். […]

தென்காசி மாவட்டத்தில் தேவர்ஜெயந்தி விழாவின்போது மின்சாரம் தாக்கி 18வயது இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தின் கோவிந்தாபேரியில் வடக்கு தெருவில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். 18 வயதான முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில்இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வந்துள்ளார். அக்டோபர் 30 ம் தேதி தேவர் ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதை அப்பகுதி மக்கள் கோலாகலமாக […]