விழுப்புரம் பகுதியில் திரு.வி.க. வீதியில் அமைந்துள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சசிகலா என்ற தலைமை ஆசிரியர் சிறப்பாக தனது பணியை செய்து வருகின்ற நிலையில், மாணவிகள் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என இவர் செய்த செயல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு சில நாட்கள் இருந்த நிலையில் காலாண்டு தேர்வில் […]

உத்திரபிரதேச மாநிலத்தின் கண்ணஜ் பகுதியில் ஒரு 12 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் மூழ்கியவாறு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அப்பொழுது அந்த சிறுமியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கவோ அவருக்கு உதவி செய்யவும் யாரும் முற்படாமல் கும்பல் கும்பலாக செல்போனில் படம் பிடித்த காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 12 வயதான அந்த சிறுமி நேற்று மாலை உண்டியல் வாங்குவதற்காக அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். அதன் […]

மலையாள படப்பிடிப்பில் வெளிவந்த ‘ஹெலன்’ திரைபட ரீமேக்கான ‘மிலி’ என்ற திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், இதன் ப்ரொமோஷன்கான பணியில் நடிகை ஜான்வி கபூர் படு பிசியாக ஈடுபட்டு வருகின்றார். இவர் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அவரிடம், தனது சுயம்வரத்தில் கலந்துகொள்ள மூன்று நடிகர்களைத் தேர்வு செய்யுமாறு கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவர் அளித்த பதில்களே தற்போது சர்ச்சைகளாக கிளம்பியுள்ளன. பாலிவுட்டில் நிறைய […]

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் கணக்கில்லாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகிறனர். இந்நிலையில் தங்க நகைகள், ஏராளமான பணம், சில்லறை காசு என காணிக்கையாக உண்டியலில் செலுத்து மன நிம்மதியுடன் வணங்கி வருகின்றனர். அவ்வாறு உண்டியலில் செலுத்தப்படும் அனைத்து காணிக்கைகளையும் எண்ணுவதற்கு வங்கி ஊழியர்கள் ஷிப்ட் முறையில் அமைக்கப்பட்டு வேலை செய்து வருகின்றனர். இப்படி உண்டியலில் சேரும் பணத்தை எண்ணும் முறையை பரகாமணி சேவை […]

தாம்பரத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்ததால், கலைந்து ஓடிய தொண்டர்களை நிர்வாகி ஒருவர் மீண்டும் அழைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடச் செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியில் பாஜக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திமுக அரசை எதிர்த்து பல்வேறு கோஷங்களை எழுப்பியும், சில கோரிக்கைகளை […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,2 08 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,557 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண் ஊராட்சி மன்ற தலைவியிடம் இருந்து 77 லட்சம் மோசடி செய்துள்ளதாக அந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் போலீசில் புகார் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் நரியம்பட்டு ஊராட்சி மன்றத்தின் தலைவராக பாரதி என்ற பெண் இருக்கின்றார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் […]

கணவர், தன்னுடைய செல்போனைப் பிடுங்கி உடைத்து விட்டதால், மனமுடைந்த மனைவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள அழகியநம்பிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் மதன் சிங் (27). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த சினேகாவை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. […]

‘இன்ஸ்டாகிராம்’ மூலம் காதலித்து திருமணம் செய்த ஒரு மாதத்தில் காதல் கணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஊருட்டு அம்பலம் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரன். இவரது மகன் பிரசாந்த் (34). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலை வளர்த்து வந்துள்ளனர். கடந்த மாதம் அந்த […]

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், 12ஆம் வகுப்பு மாணவி, காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள செம்மண் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. அந்த பகுதியில் விசைத்தறி தொழில் செய்து வரும் கோபிக்கும், அதே பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கோபியும், 12ஆம் வகுப்பு […]