போலியாக அரசியல் நன்கொடை, மருத்துவம் மற்றும் கல்விக் கட்டண விலக்குகள் தொடர்பாக தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனைகளை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்ட நிறுவனங்களின் 150 வளாகங்களில் ஒருங்கிணைந்த முறையில் சோதனை நடத்தியது. 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிச் சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து விரிவான பகுப்பாய்விற்குப் பிறகு, […]

வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த அறிவுரை வெளியிடப்படுகிறது. வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் https://emigrate.gov.in இணையதளத்தில் பதிவு […]

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்து விதி மீறலில் ஈடுபட்ட 451 […]

டெல்லி முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள உயர் ரக ஸ்மார்ட்போன்களை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரம்பற்ற லேண்ட்லைன் பில்களையும் அரசு செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், டெல்லி அரசு மொபைல் போன் கொடுப்பனவுகள் குறித்த தனது கொள்கையை திருத்தியுள்ளது, இதன் மூலம் அதன் உயர் அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகை கணிசமாக […]

இந்தியாவில் உள்ள பல வினோத கோவில்களில் ஒன்று தான் ராஜஸ்தானில் உள்ள கிராடு கோவில். இங்கு சிவனுக்கென்று ஐந்து கோவில்கள் உள்ளன. இந்தியாவின் சபிக்கப்பட்ட கோவில் என்றே இக்கோவில் குறிப்பிடப்படுகிறது. இந்த கோவிலின் சாபம் உண்மை தானா என்பதை ஆராய்ச்சி செய்யவும் இதுவரை யாரும் முன்வரவில்லை. இந்தியாவில் எத்தனையோ பழங்கால கோவில்கள் உள்ளன. இவற்றில் எதன் வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் அதற்கு பின்னால் வரமோ, சாபமோ, பயங்கரமான கதையோ இல்லாமல் […]

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் மனு கொடுக்கப்பட்ட 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என வருவாய் துறை செயலர் தெரிவித்துள்ளார் . இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் துறை செயலர் அமுதா; தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் நகர்ப்புறத்தில் 13 துறைகள் மூலமாக 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகள் மூலமாக 46 சேவைகளும் வழங்கப்படும். இந்த முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் […]

நடிகர் நாகர்ஜுனா தனது ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து அண்மையில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் 7 அல்லது 7.30 மணிக்குள் நான் என்னுடைய இரவு உணவை முடித்துக் கொள்வேன். இந்தப் பழக்கம் உங்கள் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தை சரியான முறையில் அமைத்துக் கொள்கிறது. இரவு நேரத்தில் நான் சாலடுகள், சாதம், கோழிக்கறி, மீன் சாப்பிடுவேன். 12: 12 மணி நேர இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை கடைபிடிக்கிறேன். 12 மணி நேரம் […]

ஜூலை 23 அன்று, செவ்வாய் கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வம் மற்றும் யோகம் கிடைக்கும்.. ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகளையும் நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன, இது மனித வாழ்க்கையையும், நாட்டையும், உலகத்தையும் பாதிக்கிறது. ஜூலை 23 அன்று, செவ்வாய் கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.. குறிப்பாக இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வம் […]

கூகுள் சமீபத்தில் அதன் Gemini AI ஆண்ட்ராய்டு போன்களில் சில மாற்றங்களை அறிவித்தது. அதன்படி GeminiAI இப்போது வாட்ஸ்அப் போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளிலிருந்து தரவை அணுக முடியும் என்றும், அந்த பயன்பாடுகளின் அம்சங்களை குரல் கட்டளைகள் மூலம் நீங்கள் பயன்படுத்தலாம் என்றும் பயனர்களுக்கு ஒரு மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டது. முதல் இது ஒரு வசதியான அம்சமாக தோன்றலாம்., ஆனால் உண்மையான கவலை என்னவென்றால், நீங்கள் Gemini ஆப்ஸ் செயல்பாட்டை முடக்கியிருந்தாலும் […]

புல்லட் ரயிலை விட இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கும் ரயிலை சீனா உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்தியாவில் புல்லட் ரயில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் தனது பயணத்தை தொடங்கும் என்று சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார். தற்போது உலகின் பல நாடுகளும் புல்லட் ரயில் திட்டத்தில் பணியாற்றி வருகின்றன. ஆனால் சீனாவிலிருந்து […]