வடக்கு மெக்சிகோவில் நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவொர்ம் ஈ”(“New World screwworm fly”) எனப்படும் சதை உண்ணும் ஒட்டுண்ணி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் மீண்டும் தெற்கு எல்லையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தற்காலிக இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்காலிகமாக விலங்குகள் இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது விலங்குகளின் உயிருக்கு ஆபத்தான தொற்றை தடுப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஒட்டுண்ணி அதன் லார்வாக்களுக்கு(புழு) பெயர் பெற்றது, […]

பசுபிக் பெருங்கடலில் 20,000 அடி ஆழத்தில் மர்மமான கருப்பு முட்டை வடிவிலான பொருட்களை கண்டுபிடித்துள்ள சம்பவம் விஞ்ஞான உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அவற்றை திறந்தபோது உள்ளே கண்டது தான் மிகவும் ஆச்சரியமும், வியப்பையும் ஏற்படுத்தியது. ஏனெனில் அது, இவ்வளவு ஆழத்தில் முதுகெலும்பில்லாத கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய பல புதிய தரவுகளை அளித்துள்ளது. இது பூமியின் மிக ஆழமான பகுதிகளிலும் முதுகெலும்பில்லாத உயிரினங்கள் வளர்கின்றன என்பதற்கான உறுதியான ஆதாரமாகத் திகழ்கிறது. முட்டைகள் […]

தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவற்றின் உடல்நலனையும், சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு, பெங்களூரு மாநகராட்சி (BBMP) புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகரித்துவரும் தெரு நாய் தொல்லைகள் நமது நாட்டில் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெங்களூருவில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 7 ஆயிரம் பேரை தெரு நாய்கள் கடித்துள்ளதாம். போதிய ஊட்டச்சத்து கிடைக்காததால் தான் நாய்கள் இவ்வாறு தாக்குவதாகவும், ஆகையால் அவற்றுக்கு சிக்கன் […]

காரீப் பருவத்தில் விவசாயிகளுக்கான உரங்கள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெ.பி நட்டா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் ஜெ.பி பிரகாஷ் நட்டா கூறியதாவது ; காரீப் பருவத்தில் உரத்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் யூரியா தடையின்றி விநியோகிப்பதற்கு வகை செய்ய வேண்டும். இதனையடுத்து தெலங்கானா மாநில விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் […]

உலகின் முதன்முறையாக மருத்துவர்களின் உதவியின்றி மிகமிக நுட்பமான சிக்கலான பித்தப்பை அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட ரோபோவின் செயல் மருத்துவத் துறையில் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, தற்போதுள்ள அறுவைச் சிகிச்சை ரோபோக்கள், சிகிச்சையை மேற்கொள்வதற்காக அறுவை சிகிச்சை மருத்துவர்களால் தொலைவிலிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால் புதிய அமைப்பு செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, சுயமாக முடிவுகள் எடுத்து, அறுவைச் செயல்பாடுகளில் எதிர்பாராத சிக்கல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கிறது என்று இந்த ஆய்வுக்கு […]

பிரேசிலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா மீதும் வரி விதித்துள்ளார். கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1 முதல் அமல்ப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள கடிதத்தில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் 35% வரி விதிக்கப்படும் என்றும், பெரும்பாலான பிற வர்த்தக நாடுகள் […]

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் […]

தனது மனைவி ஜ்வாலா கட்டாவுக்கு, ஆமிர் கான் உதவி செய்யாவிட்டால் தனக்கு குழந்தையே கிடைத்திருக்காது என்று விஷ்ணு விஷால் உருக்கமான பேசியுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால்-ஜூவாலா கட்டா தம்பதியின் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் இதில் ஹிந்தி நடிகர் அமீர்கான் கலந்துகொண்டு இவர்களது குழந்தைக்கு மீரா என்று பெயர் சூட்டினார். இது பெருமளவில் பேசுப்பொருளானது. ஏனென்றால், விஷ்ணு விஷாலும், அமீர்கானும் எப்படி பழக்கம். […]