காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ராஜஸ்தான் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முக்கியமான தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், முக்கிய முடிவாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் […]

அரசு கஜானா கொள்ளையடிக்கப்படுவதாக கேரள ஆளுநர் புகார் எழுப்பும் நிலையில் நாளை இதற்கான ஆவணங்கள் வெளியிடப்படும என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்… கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் மலையாளம் துறை இணை பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரியா வர்கீஸ் என்பவரும் உள்ளார். அவர் முதல்வர் பினராயி விஜயனின் தனி செயலாளர் கே.கே.ராகேஷ் என்பவரின் மனைவி. தேர்வு நடந்தபோது பிரியா வர்கீஸ் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருந்துள்ளது. இருப்பினும் தரவரிசைப் பட்டியலில் அவர் […]

சர்வதேசப் பொருளாதாரம் 1970-ஆம் ஆண்டுக்கு பிறகு மந்த நிலையை நோக்கி செல்வதாகவும், தற்போதே அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டதாகவும் உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. இதனால், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கம் குறையும் என இந்த நாடுகள் […]

தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் தீவிரவாத செயலுக்கு பயிற்சி முகாம் நடத்துவதாகவும், மத ரீதியில் இரு தரப்பினர் இடையே மோதலை உண்டாக்க முயற்சிபதாகவும் கடந்த மாதம் ஜூலை நான்காம் தேதி அப்துல் காதர், ஷேக் ஷகதுல்லா, முகமது இம்ரான், முகமது அப்துல் முபின் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு பிறகு தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கை மறுபதிவு செய்த […]

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிப்பை தொடர அவர்களுக்கு மருத்துவ சீட்டு வழங்கப்பட  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்….’’ வெளியுறவு கொள்கை தொடர்பான மக்களவை குழு , இவர்களுக்கு இந்தியாவில் மருத்துவப்படிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என பரிந்துரைத்திருந்த நிலையில் மத்திய அரசின் நிலைப்பாடு மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது… அரசு […]

புதுச்சேரி கோரிமேடு மோகன் நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் செய்வதாக தன்வந்திரி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது கடலூரைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் அவரது மனைவி உமாவும் அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியது தெரியவந்தது. இதை தொடர்ந்து […]

மதுரையில் வரும் 2024ம் ஆண்டுக்குள் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனால் இது உலக பிரசித்தி பெற்றதாக உள்ளது. அனைவரும் கண்டுகளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதற்காக பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்ய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, […]

திண்டுக்கல் அருகே பட்டியலினத்தவருக்கு  வாடகைக்கு வீடு கிடையாது என்ற வீட்டு உரிமையாளர் பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நாயக்கனூர் பகுதியில் வாடகைக்கு வீடு தேடி ஒருவர் சென்றுள்ளார். அங்கிருந்து ஒரு வீட்டு வாசலில் நின்று வாடகைக்கு வீடு கேட்டுள்ளார். வீட்டு உரிமையாளரான மூதாட்டி அவரிடம் நீங்கள் என்ன சாதி, ? எனக் கேட்டுள்ளார். நான் என்ன சாதி என கேட்கின்றேன் என நீங்கள் தவறாக […]

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியில் இருக்கும் பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ண பள்ளியில் வசிக்கும் அகிலா, ஸ்ரீகாந்த் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். இந்த கல்யாணத்திற்காக ஸ்ரீகாந்த் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்று வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது பற்றி அறிந்த அகிலா, […]

ஒசூரில் செயல்பட்டு வரும் ஏகே ஸ்டாக் நிறுவனத்தில் பிட்காயின் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து அந்நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒசூரின் பிரதான பகுதியில் ஏ.கே.ஸ்டாக் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அருண்குமார் என்பவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இதில் பிட்காயினில் முதலீடு செய்வதால் விரைவில் பணம் இரட்டிப்பாக்கிக் கொடுக்கப்படும் எனக்கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. போச்சம்பள்ளியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் லட்சக்கணக்கில் […]