நடிகர் கமல்ஹாசனின் ’பாபநாசம்’ பட பாணியில் கேரளாவில் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் பிந்து குமார் (43). இவரை கடந்த 26ஆம் தேதி முதல் காணவில்லை என்று இவரது குடும்பத்தினர் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து பிந்துகுமாரை தீவிரமாக தேடி வந்தனர். காணாமல் போன பிந்து குமாரின் செல்போன் […]

தாய்லாந்தில் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மியானமருக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இன்று சொந்த ஊர் திரும்புகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் உள்பட 300 இந்தியர்கள் மியான்மரில் இது போல சிக்கித் தவிக்கின்றனர். இவர்களை தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக […]

Amazon, Flipkart உள்ளிட்ட செயலிகளுக்கு மாற்றாக, மத்திய அரசு புதிய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் E-commerce என அழைக்கப்படும் மின்னணு வர்த்தகமானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருபக்கம் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலமாகவே பெரும்பாலானோர் வாங்கி வருகின்றனர். மேலும், இதற்கு Amazon, […]

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் கஞ்சாவில் 2000 வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் முடக்கி உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கஞ்சாபுழக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் தமிழகத்தில் ஏற்படும் குற்றங்களிலும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து ஆபரேஷன் கஞ்சா கடத்தல் மற்றும் இதை பயன்படுத்துவதற்கு எதிரான சோதனை நடத்தப்பட்டது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில்இந்த வேட்டை நடத்தப்பட்டது. […]

கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவது சலுகைதானே தவிர உரிமை அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் அனுஸ்ரீ என்பவரது தந்தை அரசு பணியாளர். இவர் திருவாங்கூர் பகுதியில் உரம் மற்றும் இரசாயன கழகத்தில் வேலை பார்த்துவந்துள்ளார். இவர் 1995ல் தனது பணிக்காலத்திலேயே உயிரிழந்தார். இவரதுமனைவியும் கேரளா அரசு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இதனால் மனைவிக்கு கருணை அடிப்படையில் அவரது வேலையை தரவில்லை. எனவே தந்தை […]

உத்தரபிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உக்ஹைதி என்ற பகுதியில்  வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதை செய்தது அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவன் என்பது அதை விட அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. கொடூரமான வன்புணர்வுக்கு ஆளான […]

ஜம்ம காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி மர்ம முறையில் கொலை செய்யப்பட்ட முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறைத்துறை டிஜிபியான ஹேமந்த் குமார் லோஹியா , ஜம்முவின் புறநகர் பகுதியில் உதய்வாலா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். டி.ஜி.பி. இருந்த வீட்டில் வேலை […]

கோவையில் நடு ரோட்டில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இடையர் வீதியில் பேக்கரி அருகே இரவு நேரத்தில் சில இளைஞர்கள் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். அவர்களின் வீடியோவை பதிவு செய்து சிலர் அதை சமூக வலைத்தலங்களில் பதிவிட்டதை அடுத்து அந்த வீடியோ வைரலானது. இது குறித்து வெறைட்டிஹால் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாக்கத்தியால் […]

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவது உண்டு. அந்த வகையில், இன்று ஆயுதபூஜை தினத்தன்று தங்கம் விலை மேலும் அதிகரித்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 […]

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, கல்வித்துறையில் அனுமதி பெற்று, சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 12ஆம் தேதி வரையும், அரசுப் பள்ளிகளின் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 9ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]