சென்னையில் இன்று முதல் மின்சார பேருந்துகள் முழுவீச்சில் இயக்கப்பட உள்ளன என தமிழக அரசு கூறியுள்ளது. சென்னை மாநகரில் தற்போது டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், 5 பணிமனைகளின் மூலம் 625 மின்சாரப் பேருந்துகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. […]

ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. அந்தவகையில் நாட்டில் உள்ள மாகாணங்களில் தங்க சுரங்கங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. நிலக்கரி சுரங்கங்களை விட, தங்க சுரங்கத்தில் பணியாற்றுவது அதிக கடினமான காரியம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கையாண்டு, சுரங்கத்தில் பணிகள் நடைபெற்று வரும். இந்தநிலையில், கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் […]

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்படுகிறது என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு […]

ரயில் டிக்கெட் முன்பதிவுகளின் போது பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. நேற்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மாற்றங்களில் தரவரிசையில் முன்னேற்றங்கள், புதிய பயணிகள் முன்பதிவு முறை (PRS) மற்றும் தட்கல் முன்பதிவுகளுக்கான நெறிப்படுத்தப்பட்ட அங்கீகாரம் ஆகியவை அடங்கும். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த வரவிருக்கும் சீர்திருத்தங்களை மதிப்பாய்வு செய்துள்ளார். “டிக்கெட் முறை ஸ்மார்ட்டாகவும், வெளிப்படையாகவும், […]

உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

மின் கட்டண உயர்வு குறித்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தாலும் வீட்டு மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இருக்காது. எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, […]

தமிழ்நாடு பிரீமியர் லீக் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இடம் பெற்ற 8 அணிகளில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் கடைசி இடத்திற்கான போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. மற்ற அணிகள் இந்த தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. இந்த […]

விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள 03.11.2017 வரை ஆறு மாத […]

அரசு வேலைகளில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் மிகவும் முக்கியமானது. சராசரியாக 60 வயதில் அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஒவ்வொருவரும் தங்கள் எதிர்காலம், வேலைக்குப் பிறகு தங்கள் குடும்பத்திற்கு என்ன நடக்கும், செலவுகள் எவ்வாறு சமாளிக்கப்படும் போன்றவற்றைப் பற்றி கவலைப்படுகிறார்கள். எனவே, ஒவ்வொரு அரசு ஊழியரும் இதைக் கருத்தில் கொண்டு குடும்ப ஓய்வூதியத்திற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இதனால் அவர் எந்த காரணத்திற்காகவும் இறந்தாலும், குடும்பம் வாழ முடியும். ஆனால் […]

சென்னை மிண்ட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், பஞ்சபூத தலங்களில் பூமித் தலமாக விளங்குகிறது. இந்த பழமையான சிவாலயத்தில், அம்பாளுக்கு எதிரே சனீஸ்வரர் வீற்றிருப்பது என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. எனவே, இத்தல அம்மனை வழிபட்டால் சனி தோஷத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இக்கோவிலில் உள்ள சப்தநாக உருவத்தில், முன்புறம் விநாயகர் மற்றும் பின்புறம் முருகன் அருள்பாலிப்பதும் மற்றொரு ஆச்சர்யமான அம்சமாகும். 1680களில், ஆங்கிலேய ஆட்சி காலத்தில், […]