fbpx

இந்திய ரிசர்வ் வங்கியின் கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் விதிமுறைகள் அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வருகின்றன.. இதனால், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான விதிகள் அடுத்த மாதம் முதல் மாறும்.. ரிசர்வ் வங்கியின் புதிய டோக்கனைசேஷன் வழிகாட்டுதல்களுக்கான முந்தைய காலக்கெடு ஜூலை 1 ஆகும், இருப்பினும், பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு பிரதிநிதித்துவங்களின் பின்னணியில் …

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத், காலமானதை தொடர்ந்து எலிசபெத்தின் மூத்த மகன், சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னராகி உள்ளார்.. இதனால் சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலா பார்க்கர் அடுத்த மகாராணியாக உள்ளார்.. இதன் மூலம் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் கமிலா வசம் செல்கிறது..

இங்கிலாந்து ராணியின் கிரீடம் பிரபலமானது.. …

2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்…

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, ஒவ்வோரு ஆண்டும் பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது.. அந்த வகையில் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு மே 1 முதல் செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.. …

காரில் பயணிப்போர் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும் எனவும், மீறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..

மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 194B (பாதுகாப்பு பெல்ட்கள் மற்றும் குழந்தைகள் இருக்கைகளைப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இந்த நடைமுறை ஏற்கனவே அமலில் இருந்தாலும், பலரும் இதை …

சேலம்‌ மாவட்டத்தில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ கறவை மாடுகள்‌ வாங்க திட்டத்தொகை ரூ.150 இலட்சத்திற்கு தாட்கோ மானியமாக ரூ.45,000/- வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது ; தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கானபொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்தில்‌ மாண்புமிகு ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌‌ நலத்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ அறிவிப்பில்‌ 500 …

சேலம்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த நில அளவர்‌ மற்றும்‌ வரைவாளர்‌ ஆகிய பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும்‌ தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகள்‌ 16.09.2022 அன்று சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக துவங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நில அளவர்‌ , வரைவாளர்‌ …

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான …

தமிழக காவல்துறை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு …

திமுகவின் அடக்க முறைக்கு தமிழக பாஜக அஞ்சப் போவதில்லை என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமிபத்தில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்துடன் சேர்த்து சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதன் …

ஆதிதிராவிடர் தொழில் முனைவோருக்கு சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் 2022-2023-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக …