சென்னை புறநகர் ரயில்களில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை புறநகர் மற்றும் MRTS ரயில் சேவைகளில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சிலர் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்து வருவது ரயில்வேயின் கவனத்திற்கு வந்துள்ளது. சமீப காலங்களில், ஓடும் ரயில்களில் நடைமேடையில் சறுக்குவது (skating-style stunts), […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைக்கோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரை புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில், ‘ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியினை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்வதற்காக 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், […]
இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் 30-ம் தேதி அதிகாலை வட தமிழகத்தை நெருங்கும். இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டித்வா’ புயலாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்காக நகர்ந்து, வடதமிழகம், […]
100 feet high waterfall.. The holy water that cures sins.. The amazing Shiva temple in Tirupati that many people don’t know about..!!
வடகிழக்கு மாநிலத்தில் பலதார மணம் மற்றும் பலதார மண நடைமுறைகளைத் தடைசெய்து நீக்குவதை நோக்கமாகக் கொண்ட சர்ச்சைக்குரிய அசாம் பலதார மண தடை மசோதா, 2025 அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.. இந்த மசோதா இனி ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2026 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சீரான […]
நடந்து செல்லும் போது சாலையில் திடீரென பணம் கிடைத்த அனுபவத்தை நம்மில் பலரும் அனுபவித்திருப்போம்.. ஆனால் அந்த நேரத்தில், பலருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். இந்தப் பணத்தை நாம் எடுக்கலாமா? கூடாதா? அது சுபமானதா? அது அசுபமானதா? என்ற கேள்வி மனதில் எழுகிறது. இருப்பினும், ஜோதிடத்தின் படி, சாலையில் காணப்படும் பணத்திற்கு சிறப்பு அர்த்தங்கள் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சாலையில் பணம் கிடைத்தால், அது லட்சுமி தேவி உங்களிடம் மகிழ்ச்சி […]
சென்னை போரூரில் 2017-ஆம் ஆண்டு 7 வயது சிறுமி ஹாசினி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. சென்னை போரூரை அடுத்த மதநந்தபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது 6 வயது மகள் ஹாசினி. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். இதுகுறித்து ஹாசினியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருந்தனர். போலீசார் அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு […]
பல்கேரியாவின் பாபா வாஙாவின் கணிப்புகளைப் போலவே, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி ரியாஸ் அஹ்மத் கோஹர் ஷாஹியின் ஒரு புதிய கணிப்பு உலகம் முழுவதும் கவலை கிளப்பியுள்ளது. ஒரு மிகப் பயங்கரமான விண்கல் பூமியை விரைவில் தாக்கப் போகிறது என்று அவர் கணித்துள்ளார்.. அது மனிதகுலத்தையும், பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் முழுமையாக அழிக்கக்கூடிய பெரிய பேரழிவு உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.. மேலும் விண்கல் மோதல் நிகழும் நாள் […]
தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு கட்சியின் முக்கிய பொறுப்புகளை அக்கட்சி தலைவர் விஜய் வழங்கி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர்: தாம் சார்ந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்: அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி, நன்மதிப்பைப் பெற்றவர்: மூத்த அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள். இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்மோடு […]
உள்துறை அமைச்சகம் (MHA) புதிய இணைய பாதுகாப்பு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இதில், திருமணத் தொடர்பு இணைய தளங்கள் மூலம் ஒருவரின், உணர்ச்சியை பயன்படுத்தி நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்புக்கான மையத்தின் (I4C) கீழ் செயல்படும் தேசிய சைபர் குற்ற மிரட்டல் பகுப்பாய்வு பிரிவு (NCTAU) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. திருமண தளங்களின் மூலம் நடக்கும் போலி ப்ரொஃபைல்கள் மற்றும் முதலீட்டு […]

