சமையலறையின் அத்தியாவசியத் தேவையான தக்காளி, தற்போது ஏழைகளின் ஆப்பிள் என்ற நிலையிலிருந்து மாறி, விலையில் நிஜமான ஆப்பிளுக்கே சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக திருப்பூர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் தரமான தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய் வரை சில்லறை விற்பனையில் விற்கப்படுவதால், பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். சந்தை நிலவரப்படி, சுமார் […]