உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.. இந்த நிலையில்  2025-ம் ஆண்டு, இலக்கியத்திற்கான […]

துருக்கியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2,700 ஆண்டுகள் பழமையான ஒரு கோவிலைக் கண்டுபிடித்துள்ளனர். ஐந்து நூற்றாண்டுகளாக இந்த நாடு மிகப்பெரிய இஸ்லாமியப் பேரரசான ஒட்டோமான் பேரரசின் மையமாக இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நவீன நகரமான டெனிஸ்லிக்கு அருகில் காணப்படும் இந்தக் கோயில், கிமு 1200 முதல் 650 வரை இந்தப் பகுதியை ஆண்ட ஃபிரைஜியர்களின் காலத்திற்குச் சொந்தமானது என்று நம்பப்படுகிறது. ஃபிரைஜியன் பேரரசின் மிகவும் பிரபலமான ஆட்சியாளர் […]

கரூரில் கடந்த 27-ம் தேதி விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது. இது தொடர்பாக தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.. இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழுவை (SIT) அமைத்தது.. இந்த குழு கரூர் […]

ஜோதிடத்தில், கர்மவினையை வழங்குபவராகவும், நீதிபதியாகவும் கருதப்படும் சனி பகவான், நீண்ட காலத்திற்குப் பிறகு தனது இயக்கத்தை மாற்றுவார். கடந்த 138 நாட்களாக வக்ரத்தில் (வக்ரி) இருந்த பிறகு, சனி நவம்பர் 28, 2025 அன்று தனது நேரடி இயக்கத்தை (மார்கி) தொடங்குவார். சனியின் இந்த நேரடி இயக்கம் ஜாதகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். நிதி சிக்கல் முன்னேற்றம் சனி நேரடியாக நகரத் தொடங்கும்போது, ​​நீதி மற்றும் ஒழுக்கத்தின் அம்சங்கள் மேலும் […]

ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. இதனால் நாடு தழுவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.. வைரஸ் இதுவரை இல்லாத வேகத்தில் உருவாகி வேகமாகப் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த பரவல் காரணமாக ஜப்பான் முழுவதும் மருத்துவமனை வார்டுகள் நிரம்பி வழிகின்றன, நாடு தழுவிய பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், ஜப்பானில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சல் காரணமாக இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படுகின்றன என்பதைக் […]