நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வழங்க தேசிய திறந்த வெளிப்பள்ளிகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் தொலைதூரக் கல்வி வழங்கப்படுவதோடு குறிப்பிட்ட வயது அடைந்தவர்கள் தனித்தேர்வர்களாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் எழுதலாம். அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் . இந்நிலையில் தேசிய திறந்தவெளி பள்ளிகள் மூலம் வழங்கப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சான்றிதழ்கள் செல்லாது என […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சென்னை நகர பேருந்தில் பின்பக்க இருக்கைக்கு கீழிருந்த பலகை உடைந்ததால் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்ற பேருந்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் சென்ற பேருந்து என்.எஸ்.கே நகர் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பக்க இருக்கைக்கு கீழிருந்த மரப்பலகை உடைந்துள்ளது. இதனால் இருக்கையில் […]
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிழ்த்தான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏ.இராமலிங்கபுரம் என்ற கிராமத்தில் மாரிச்சாமி என்பவர் வசித்து வந்தார். தற்போது மாரடைப்பால் இறந்த அவரைத் தகனம் செய்ய, பொது எரியூட்டு மைதானத்தை பயன்படுத்த அவரது குடும்பத்தினருக்கு தடை விதிக்கப்பட்டது. இறந்த மாரிச்சாமியின் சகோதரர் பேசியபோது, தனது அண்ணன் மாரிச்சாமி, அச்சம்தவிழ்த்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏ.இராமலிங்கம் கிராமத்தில் இடம் வாங்கி வீடு கட்டி குடியேறியதாக தெரிவித்தார். அந்த ஊரில் […]
தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும், நாட்டில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், மதவாதம் மூலம் மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகள் அதிகரித்துவிட்டதாகவும் விஜய் தனது அறிக்கையில் கூறியிருந்தார். ஆனால், கடந்த காலங்களில் நடிகர் விஜய் வரி கட்டாமல், வருமானவரியைச் சரியாகத் தாக்கல் செய்யாமல் இருந்துள்ளதாக நீதிமன்றமே கூறியுள்ளது. இன்று ஊழலை எதிர்க்கும் விஜய், அன்றைக்கு அப்படி நடந்து கொண்டது […]
வீட்டில் பணிபுரிந்த 18 வயது பணிப்பெண்ணை அடித்து சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், தலைமறைவாக இருந்த இருவரையும் வலைவீசி தேடி வந்தனர். பின்னர், ஆந்திராவில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஆண்டோ – […]
பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி ஒரு ராஜ்யசபா தொகுதியும் தருவதாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி இணைந்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. என்னதான் அவர் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கூறினாலும், அவருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட […]
தஞ்சையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர், தனது பணியாளர்களை உற்சாகப்படுத்த 11 சொகுசு கார்களை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தஞ்சையைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஹம்சவர்தன் 2014ஆம் ஆண்டு பிபிஎஸ் என்ற மென் பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார். 4 பேருடன் ஆரம்பித்த நிறுவனம், தற்போது 400 பணியாளர்கள் கொண்ட நிறுவனமாக வளர்ந்துவிட்டது. இந்நிலையில், தனது ஊழியர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தும் பரிசு ஒன்றை வழங்க ஹம்சவர்தன் முடிவு […]
தஞ்சை அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன் காலமானார். அவருக்கு வயது 53. தஞ்சாவூர் மாவட்டம் நீலகிரி ஊராட்சிக்குட்பட்ட ரஹ்மான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். 1985ஆம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த இவர், அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் 2001 முதல் தொடர்ந்து 3 முறை ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறை போட்டியிட்டதிலே தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2014 முதல் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில், வாஷிங் மெஷினை ‘ஆன்’ செய்ய உதவிக்கு கூப்பிட்ட பக்கத்து வீட்டு பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியைச் சேர்ந்தவர் யோகன்னான். இவர் அந்தமானில் வேலை செய்கிறார். அவரது மனைவி அபிலா (28) தனது 7 வயது குழந்தையுடன் பூத்துறையில் வசித்து வருகிறார். வாஷிங் மெஷின் ஒன்றை புதிதாக வாங்கியுள்ள அபிலா, […]
கன்னியாகுமரி மாவட்டத்தின் தென் தாமரை குளம் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் கட்டிட தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தென்தாமரைகுளம் வடக்கு கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன். 47 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் தீராத மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இந்நிலையில் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்ததால் […]