“Don’t share in the ruling power in 2026..!” Thirumavalavan hit the sack.. what’s the matter..?
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (30) என்பவருக்கும், பர்கூர் அருகே உள்ள கோதியழகனூரைச் சேர்ந்த வெங்கடேசன் (35) என்பவருக்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில வருடங்களிலேயே இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் ஏற்பட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். சண்டைகள் தீவிரமானதால், மகாலட்சுமி 4 மாதங்களுக்கு முன்பு கணவர் வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் […]
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், தங்கத்தை அவசர தேவைகளுக்கான முக்கிய நிதி ஆதாரமாகப் பயன்படுத்தும் வழக்கம் மக்களிடம் குறையவில்லை. தேவைப்படும்போது உடனடியாகப் பணமாக மாற்ற முடியும் என்பதாலும், வங்கிகளில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம் என்பதாலும், தங்க நகைக்கடனுக்கு எப்போதும் அதிக தேவை உள்ளது. இந்தக் கடன் நடைமுறையில் ஆவணங்களோ, அதிக சிக்கல்களோ இல்லை என்பதால், சாமானியர்கள் தங்க நகைக்கடன் பெறுவதையே அதிகம் விரும்புகின்றனர். தேசிய […]
2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை 1,270ஆக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர். வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (தொகுதி II மற்றும் IIA) பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 15.07.2025 அன்று வெளியிடப்பட்டது. தற்போது […]
விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஒரு தலைமை காவலர் (ஏட்டு), புகார் கொடுக்க வந்த இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இச்சம்பவம் குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஒன்றில் புகார் அளிக்க இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அந்த காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த […]
கடல்சார் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பை சென்னை ஐஐடி தொடங்கி உள்ளது. கடல்சார் சட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்பை 5 நாள் (2026 பிப்ரவரி 9 முதல் 13 வரை) நடத்தவிருப்பதாக சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. இந்தப் படிப்பு, துறைமுகம், கப்பல் போக்குவரத்து, கடல்சார் தொழில்துறை ஆகியவற்றில் அத்தியாவசியமான உத்திசார்ந்த சட்டம் மற்றும் செயல்பாட்டு அறிவுடன் ஊழியர்களைத் தயார்படுத்தவும் மற்றும் புதிதாக வேலை தேடுவோருக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பணி செய்வோருக்கு […]
புதுக்கோட்டை நகரத்தின் தெற்கு 4-ஆம் வீதியில், மிகவும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற விட்டோபா திருக்கோவில். கிருஷ்ணர், ராதையுடன் இணைந்த வடிவில் காட்சி தரும் இந்த கோவில், மாவட்டத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இக்கோவில், பக்தர்கள் மன அமைதி தேடி வரும் ஓர் உன்னத இடமாக விளங்குகிறது. விட்டோபா கோவிலில் வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு […]
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில், வரும் 23, 24-ம் தேதிகளில் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு […]
குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை 1,270ஆக அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. டிஎன்பிஎஸ் வெளியிட்டு அறிக்கையில் “ சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள், குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 15.07.2025 அன்று வெளியிடப்பட்டது. தற்போது 625 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகாணி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30), என்பவர் காணாமல் போன வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருமணமாகாத மணிகண்டன், ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அங்கு அவருக்கு பாரதிராஜா (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் எந்தக் கணக்கும் பார்க்காமல் ஒன்றாகப் பணம் செலவழித்து, பல திருமணமான பெண்களுடன் உல்லாசமாக […]

