தமிழக வெற்றிக் கழகம் – தேமுதிக கூட்டணி குறித்து பிரேமலா விஜயகாந்த் பரபரப்பு பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், தற்போதில் இருந்தே அரசியல் கட்சியினர் தங்களது கூட்டணி கட்சிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்த தேமுதிக, இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி வர வேண்டும் என்று பிரேமலா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Central Bank of India வகை : வங்கி வேலை மொத்த காலியிடங்கள் : 4500 பணியின் பெயர் : Apprentice பணியிடம் : தமிழ்நாடு கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (பட்டப்படிப்பு) […]
Ration Card Update : அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் தங்கள் ரேஷன் அட்டையின் e-KYC செயல்முறையை ஜூன் 30, 2025 க்குள் முடிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் விநியோக முறையை சிறப்பாகவும், வெளிப்படையாகவும் மாற்ற மத்திய அரசு […]
விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்.அதிகாரி அருண்ராஜ், விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணையவுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை வலுப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அதிமுக, திமுக கூட்டணி தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், தவெகவும் அதற்கு இணையாக இருக்க வேண்டும் என விஜய் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மேலும், பிரபலமாக இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை தவெகவுக்குள் கொண்டுவர விஜய் முயற்சித்து […]
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் […]
நாமக்கல் மாவட்டத்தில் தோட்டத்து வீட்டில் மூதாட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளையும் பாதுகாப்பாக கடப்பதே அக்னிப் பரீட்சையாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த சாமியாத்தாள் […]
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். வியூகம் வகுப்பது, புதிய நிர்வாகிகள் நியமனம், நீக்கம், நிர்வாகிகளுடன் ஆலோசனை, கூட்டணி போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதை இலக்காக வைத்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான், தென் மாவட்டங்களை குறிவைத்து […]
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், […]
கொங்கு மண்டலத்தில் முதியோர்களை குறிவைத்து கொலை செய்கிறார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றிருந்தார். இதில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “எந்த வேலையுமே செய்யாமல், கடந்த 4 ஆண்டுகளாக திமுக தனது ஆட்சியை ஓட்டி வருகிறது. தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாகவே […]
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, இன்று முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம், 2022-23 கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் 2026-27 கல்வியாண்டு வரை […]

