‘வேட்டையாடு விளையாடு’ சினிமா பாணியில் சென்னை மென்பொறியாளர் ஒருவர் தனது முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி ஹீலியம் வாயுவை சுவாசித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள தோட்டக்காட்டூரை சேர்ந்த திருவேங்கடசாமி – மரகதமணி தம்பதியரின் மகள் இந்து. இவர், கோவையில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், நல்லகண்டன் பாளையத்தை சேர்ந்த மென்பொறியாளர் விணுபாரதிக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. […]

மாணவர் சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில்‌ வேளாண்மை பாடத்தை கூடுதலாக மேல்நிலை பள்ளிகளில்‌ தொழிற்பாடப்‌ பிரிவாக அறிமுகப்படுத்தி 300 வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள்‌ தோற்றுவிக்கப்பட்டது. இவற்றில்‌ மாணவர்‌ சேர்க்கையின்றி காலியாகவுள்ள வேளாண்மை பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌(TRB) மூலம்‌ தெரிவு செய்து நியமனம்‌ செய்யப்பட்டவர்கள்‌, ஆசிரியர்களின்‌ காலிப்பணியிடங்களை இணைப்பில்‌ கண்டுள்ள படிவத்தில்‌ […]

ஓய்வூதியர்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ அடுத்த மாதம் 28-ம் தேதி நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌. தருமபுரி மாவட்டத்தில்‌ ஓய்வூதியர்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌, தருமபுரி மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ சென்னை ஓய்வூதிய இயக்குநர்‌ அவர்களால்‌ 28.10.2022 அன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில்‌ தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ நடைபெற உள்ளது. எனவே ஓய்வூதியம்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியம்‌ பெற்று […]