சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது கார்த்திகை சுபமுகூர்த்த நாளான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து […]

பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டத்துக்கு, விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுகுறித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் […]

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள குறுங்கலூர் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (23) என்ற சமோசா தயாரிப்பு நிறுவன ஊழியர் ஒருவர், தனது காதலியின் துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிதும் படிக்காத காளிதாஸ், கடந்த 3 வருடங்களாக சமோசா தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து, சந்தைகளில் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தார். அரிமளம் சந்தையில் அவர் கடை போட்டிருந்தபோது, அதே பகுதியைச் […]

சென்னை திருவான்மியூர் மேட்டுத் தெருவில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் சதீஷ்குமாரின் மனைவி மஞ்சு (40). இவர் நேற்று முன்தினம் காலை சுமார் 10 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தபோது, 50 வயது மதிக்கத்தக்க ஒரு குடுகுடுப்பைக்காரர் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த நபர், மஞ்சுவிடம், “உங்கள் வீட்டிற்கு கெட்ட நேரம் வந்துவிட்டது; உங்கள் குடும்பத்திற்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது. கணவர் மற்றும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது” என்று கூறியுள்ளார். இதனால் […]

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு, த.வெ.க.வின் செயல்பாடுகளில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக விஜய் நேர்காணல்கள் நடத்தியதாகவும், சுமார் 70 சதவீத வேட்பாளர் பட்டியலை அவர் இறுதி செய்துள்ளதாகவும் தகவல் […]

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனைப் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. வலுவான கூட்டணிக் கட்டமைப்பை வைத்திருக்கும் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் வியூகம் வகுத்து வருகிறது. மற்றொருபுறம், யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துச் […]

மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் “கபீர் புரஸ்கார்” விருது பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசின் 2026ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20,000/-, ரூ.10,000/- ரூ.5,000/- தகுதியுடையோருக்கு வழங்கப்படுகிறது. தருமபுரி […]

தமிழ்நாட்டின் முட்டை உற்பத்தியின் முக்கிய மையமான நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்றுமதியின் தேவை அதிகரிப்பு மற்றும் உள்ளூர் உற்பத்தியின் குறைவு போன்ற காரணங்களால், கடந்த சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள சுமார் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினசரி சராசரியாக 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழ்நாடு […]