இந்திய விமானப்படையின் அக்னிபாத் திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் மகளிர் சேர்க்கப்பட உள்ளதாக விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்திரி அறிவித்துள்ளார். இந்திய விமானப்படை தினம், விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்திரி தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. சண்டிகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய விமானப் படைத் தளபதி, ’இந்திய விமானப்படை அதிகாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆயுதப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இப்போது தான் இந்த பிரிவு தொடங்கப்படுகிறது. மத்திய அரசு […]

பிடித்த யூடியூபரை பார்க்க 300 கி.மீ. பயணித்த சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியைச் சேர்ந்த பிரபல யூடியூபரான நிஸ்சய் மல்ஹான், Triggered Insaan என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரது சேனலில் ரோஸ்ட், காமெடி மற்றும் கேமிங் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவருக்கு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் பெரிய ரசிகராக உள்ளான். இந்த சிறுவனுக்கு நிஸ்சய் மல்ஹானை […]

50 வயது பெண்ணை இரண்டு காவலர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பெண்ணின் பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வழக்கம் போல விவசாய வேலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள வயல் பகுதியில் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, குடிபோதையில் இருந்த காவல்துறையினர் இருவர் அங்கு வந்துள்ளனர். போதையில் தனியாக இருந்த […]

வருங்கால மருமகனுக்கு 125 வகையான பலகாரங்கள், உணவு வகைகளை பரிமாறி அசத்தியுள்ளார் மாமியார். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் எஸ்.கோட்டா பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா-சுப்புலட்சுமி தம்பதியின் ஒரே மகன் சைதன்யா. இவருக்கும், விசாகப்பட்டினம் ஸ்ரீநிவாச ராவ்-தனலட்சுமி தம்பதியின் மகள் நிஹாரிகாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தசரா பண்டிகைக்கு வருமாறு வருங்கால மாப்பிள்ளையை பெண் வீட்டார் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,797 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 6 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,884 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

பெங்களூருவில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட ஆன்லைன் புக்கிங் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடகா போக்குவரத்து ஆணையர் டிஎச்எம் குமார் கூறுகையில், ’கடந்த சில நாட்களாகவே ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் அதிக அளவில் புகார் அளித்துள்ளனர். டாக்ஸி சேவை அளிக்கும் நிறுவனங்கள் கண்மூடித்தனமாக அதிக கட்டணங்கள் வசூலிக்கின்றன. எனவே, சேவைகளை நிறுத்த உத்தரவிடப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய […]

மகாராஷ்டிராவின் நாசிக்கில் நேற்றிரவு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்ததில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நாசிக்கில் நேற்று இரவு பேருந்து தீப்பிடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். உடல் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், மருத்துவரின் உறுதிப்பாட்டுடன் இறப்புகளின் சரியான எண்ணிக்கையை தெரிவிக்க முடியும், ”என்று நாசிக் போலீசார் தெரிவித்தனர். நாசிக்-அவுரங்காபாத் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் சொகுசு பயணிகள் […]

பிரபல நடிகையை மொபைல் ஷோரும் ஊழியர்கள், கையை பிடித்து இழுத்து ஷோருமின் ஷட்டரை மூடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் அன்னா ரேஷ்மா ராஜன், தனது அம்மாவின் செல்போனில் உள்ள சிம்கார்ட்டில் பிரச்சனை ஏற்பட்டதால், வேறு சிம் கார்டு வாங்குவதற்காக ஆலுவா பகுதியில் உள்ள நிறுவனத்தின் ஷோரூமுக்கு சென்றுள்ளார். மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து, தலையை துப்பட்டாவால் மூடிக்கொண்டு அங்கு சென்றுள்ளார். […]

SSC – CGL தேர்வுக்கு இன்று மாலைக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 20,000-ற்கும்‌ மேற்பட்ட குரூப்‌ B மற்றும்‌ குரூப்‌ C ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப்‌ பட்டப்படிப்பு அளவிலானஸ பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக இன்று மாலைக்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. இத்தேர்விற்கான கல்வித்தகுதி சூறைந்தபட்சம்‌ ஏதாவது ஒரு பாடத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட […]

ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. நம் நாட்டில் நடக்கும் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர், அதே தேர்தலில் வேறு தொகுதியிலும் போட்டியிடலாம். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்து விடுவர். அதனால், அந்த பகுதிக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும். பெரும்பாலும், அரசியல் முக்கிய தலைவர்கள் […]