வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவவர் சோனியா காந்தியுடன்  டெல்லியில் சந்தித்தனர்.  வருகின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அல்லாத எதிர்கட்சிக்கான கூட்டணியை ஒன்றிணைக்கும் தீவிர பணியில் பீகார் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார். பீகாரில், பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து கொண்ட பின்னர், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நிதிஷ் […]

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு  வேட்புமனுவை மூத்த தலைவர்களுள் ஒருவரான சசி தரூர் சார்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதில் போட்டியிடுபவர்களுக்கு வேட்புமனுக்களை விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 30-ம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் […]

திருப்பதி அருகே புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவரும் அவரது 2 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டாவில் கார்த்திகேயா மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டது.  மருத்துவர் ரவிசங்கர் ரெட்டி என்பவர் இந்த மருத்துவமனையை கட்டியுள்ளார். மூன்று மாடி கட்டடத்தில் மூன்றாவது தளத்தில் மருத்துவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த மருத்துமனையில் இன்று எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து […]

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு நேற்று திடீரென சுவாசப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குறைந்தபட்ச செயற்கை சுவாசம் மூலம் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிறப்பு மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் […]

அங்கிதா பந்தாரி கொலை வழக்கில் இறுதிச் சடங்கு செய்வதற்கு அவரது உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்துள்ளனர். உத்தரகண்டில் பவுரி மாவட்டத்தில் 19 வயது இளம் பெண் கடந்த 6 நாட்களுக்கு முன் காணாமல்போனார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து நேற்று ரிசார்ட்டில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அங்கிதா பந்தாரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்தது தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரிசப்ஷனிஸ்டான அங்கிதா பந்தாரியை கொலை செய்து […]

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் தன்னுடைய ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போடச் சென்ற ஒருவர் பங்க் ஊழியருக்கு ரூ.550 கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக ரூ.55,053 செலுத்தியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஷெல் பெட்ரோல் பங்கில் அந்த நபர் தன்னுடைய ஸ்கூட்டருக்கு டேங்க் ஃபுல் செய்திருக்கிறார். அதற்கு பில் ரூ.550 வந்திருக்கிறது. அந்த வாடிக்கையாளரும் கூகுள் பே மூலம் பணம் செலுத்த முயற்சித்துள்ளார். அப்போது, QR குளறுபடியால் ரூ.550-க்கு பதில் ரூ.55,053 என தவறுதலாக […]

கார் ஓட்ட கற்றுக் கொண்டிருந்த 40 வயதான பெண் ஒருவர், பிரேக் போடுவதற்கு பதிலாக க்ளட்சை வேகமாக அழுத்தியதால், 19 வயது டெலிவரி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இரவுப் பகல், வெயில், மழை என எந்த சூழலையும் பாராமல் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை கொண்டு சேர்க்கும் வேலைகளில் டெலிவரி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் கஸ்டமர்கள் வாயிலாக சந்திக்கும் இடர்பாடுகள் பலவும் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. […]

மாணவர்களுக்கு இடையேயான சண்டையை தடுத்த பள்ளி முதல்வரை, மாணவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரின் பள்ளியொன்றில் 12ஆம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா, சண்டையிட்டுக் கொண்டிருந்த மாணவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். அப்போது, பிளஸ்2 மாணவன் ஒருவனைப் பள்ளி முதல்வர் திட்டியதாகச் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த […]

பருவநிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”சிவிங்கிகள் இந்தியாவிற்கு திரும்பி வந்தது குறித்து நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தியர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சிவிங்கிகளை கண்காணிக்கவும், பார்வையாளர்கள் பார்வையிடவும் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு பெயர் வைப்பது குறித்து மக்கள் தங்களின் எண்ணங்களை தெரிவிக்கலாம். […]

திருமலை – திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்தின் மதிப்பை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ளார். திருமலை – திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டமானது, தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துகள் குறித்து இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 960 […]