கொள்கை எதிரிகளோடு ஒருபோதும் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தவெகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் விஜய் கூட்டணி தொடர்பான முக்கியமான அறிவிப்பை வெளியிட்டா. அப்போது பேசிய அவர் “ கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை.. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக, மக்களை மத ரீதியாக பிளவுப்படுத்தி, வேற்றுமையை விதைத்து குளிர்காய நினைக்கிறது பாஜக. அவர்களின் இந்த […]

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் நியமிக்கப்படுவதாக தவெக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் செயற் குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு கட்சி தலைவர் விஜய் பகல் 12 மணிக்கு வந்தார். தொடர்ந்து கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கொள்கை தலைவர்கள் […]

தவெக மாநில செயற்குழு கூட்டத்தில், நிர்வாகிகளுக்கு விஜய் சில முக்கிய அறிவுரைகளையும் வழங்கி உள்ளார். தவெகவின் மாநில செயற்குழு கூட்டம், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில மண்டல நிர்வாகிகள், செயலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விஜய்யின் தாயார் ஷோபாவும் இதில் கலந்து கொண்டார். செயற்குழு கூட்டம் […]

பாமக சட்டப்பேரவை கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று எம்.எல்.ஏ அருள் தெரிவித்துள்ளார் பாமகவின் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டி உள்ளது. தலைமை பதவி தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கட்சி நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளையும் அறிவித்தும் இருவரும் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன் தினம் […]

இன்று நடைபெறும் தவெக செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவை விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தவெகவின் மாநில செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.. விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் பணி, கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் அஜித்குமார் கொலை, விவசாயிகள் பிரச்சனை குறித்து கண்டன தீர்மானங்களை நிறைவேற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. தேர்தலையொட்டி […]

விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர், திருநின்றவூரில் பெண் கவுன்சிலர் கோமதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, கணவரே வெட்டி கொலை செய்துள்ளார். மனைவி கோமதியை கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்தார். திருவள்ளூர், திருநின்றவூரில் விசிக […]

திமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளதாக பேசிய முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு பதிலளித்த ராமதாஸ், அதில் பாமக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. எனவே, பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கும்போது கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி போராடிய சிஐடியு தோழர்களை விருதுநகர் எஸ்.பி. கண்ணன் […]

என்னை திருமணம் செய்துவிட்டு, ஒரே நாளில் நிகிதா ஓடிவிட்டார் என்று தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன்ஜி கூறினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி […]

ஸ்டாலின் ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, 13 வயதான ரோகித் என்ற சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் ஆதித்யா, […]