வருடம் முழுவதும் மற்ற விரதங்களை மேற்கொள்ள முடியாதவர்கள் கூட, கார்த்திகை மாதத்தில் வரும் மகா தீபத் திருநாளில் ஒரு நாள் முழுவதும் விரதத்தைப் பின்பற்றினால், சிவபெருமானின் அருள் முழுமையாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அருணாசலேஸ்வரரின் ஜோதித் திருநாளாகக் கருதப்படும் கார்த்திகை தீபம், ஆண்டிற்கு ஒருமுறை ஈசன் அர்த்தநாரீஸ்வரராக வெளிப்படும் உன்னத தருணமுமாகும். இந்த நாளில் தீபம் ஏற்றுவது ஒளி, ஆன்மீகம் மற்றும் தூய்மையை ஒருசேரப் பெற்றுத் தரும் என்றும், இறைவனை […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை நேரில் தரிசிப்பதற்கான கட்டண அனுமதிச் சீட்டுகள் இன்று (டிசம்பர் 1) காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகின்றன. ஆன்லைன் பதிவு விவரங்கள் : வரும் டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் […]

முருகப்பெருமானுக்கு உலகம் முழுவதும் பல கோவில்கள் இருந்தாலும், பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதும் காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால் மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தல் போன்ற வழக்கமான வழிபாடுகளையே மேற்கொள்வது வழக்கம். ஆனால், தமிழ்நாட்டிலேயே ஒரு முருகன் கோவிலில் நைவேத்தியமாக சுருட்டுப் படைத்து வழிபடும் வினோத வழக்கம் பின்பற்றப்படுகிறது என்றால் நம்புவது கடினம். சுருட்டு படைக்கும் வழக்கம் தோன்றியது எப்படி..? வழக்கமாக, முனீஸ்வரர் அல்லது கருப்பசாமி போன்ற தெய்வங்களுக்கே […]

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி திதியில் சிவ வழிபாடு செய்வது மன அமைதி, செல்வ வளம் மற்றும் வாழ்வில் நிலைத்தன்மை ஆகியவற்றைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். பௌர்ணமி நாளில் சிவ தரிசனம், கிரிவலம், விரதம், மற்றும் புனித நீராடுதல் ஆகியவை விசேஷ பலன்களை அளிப்பதுடன், பாவங்களைப் போக்கி சிவனின் அருளையும் பெற்றுத் தரும். அதிலும், நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய தலமான திருவண்ணாமலையில் பௌர்ணமியில் கிரிவலம் வருவது முக்தியை […]

பெருமாளை நாம் காக்கும் கடவுளாகப் போற்றி வழிபடுகிறோம். வறுமை நீங்கிச் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கும், விருப்பங்கள் நிறைவேறுவதற்கும், வாழ்வில் நிலைத்தன்மை மற்றும் உயர்ந்த நிலையை அடைவதற்கும், பாவங்கள் நீங்கி வைகுண்டப் பதவியை அடைவதற்கும் பெருமாளை வழிபடுவது உண்டு. அவருடைய திருநாமங்களை நினைத்தாலும், உச்சரித்தாலும், கேட்டாலும் கூட அது பெரும் புண்ணியத்தைத் தரக்கூடியதாகும். ஒரே ஒரு துளசியை அவருக்குப் படைத்து வழிபட்டாலும் கூட, அவர் மனம் இறங்கி நம் பாவங்களைப் போக்கி […]

ஜோதிடத்தின்படி, தற்போது கிரகங்களின் தனித்துவமான சேர்க்கையால், ‘ஹம்ச ராஜயோகம்’ உருவாகியுள்ளது. இதனுடன், ‘அனாப யோகா’, ‘தான யோகா’ மற்றும் ‘த்ருதி யோகா’ போன்ற பல நல்ல யோகங்கள் உருவாகி வருகின்றன.. இந்த அரிய யோகங்களின் பலன்கள் ஐந்து ராசிக்காரர்களுக்கு அற்புதமான அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும் என்று ஜோதிடர்கள் கருதுகின்றனர். அந்த ஐந்து அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களின் மகிழ்ச்சி மற்றும் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.. […]