இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த 16 ஆம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்த நிலையில், ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி சார்பில் துவக்க ஆட்டக்காரர்களாக டேவிட் […]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததில் இருந்து ரசிகர்கள் கேப்டன் ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கேப்டன் பொறுப்பிலிருந்து அவரை மாற்ற வேண்டும் என பல தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு பெரும் அழுத்தத்தில் இருந்துவரும் ரோகித் சர்மா தன்னுடைய கேப்டன் பொறுப்பை துறக்கும் முடிவிற்கு வந்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் உலகக் […]

முதலமைச்சர் கோப்பைகான விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் முதலமைச்சர் கோப்பைகான மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதைத் தொடாந்து அங்க பேசிய அமைச்சர் உதயநிதி, “பல எழுத்தாளர்களையும் அரசியல் தலைவர்களையும் உருவாக்கிய தஞ்சை மண், […]

கொலம்பியக் குடியரசில் நடந்த உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்று அசத்தியுள்ளார். கொலம்பியக் குடியரசில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் காம்பவுண்டு பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர், நெதர்லாந்தின் ஸ்க்லோசர், பிரேசிலின் லூகாஸ் மற்றும் அமெரிக்காவின் ஜேஸ்ம் ஆகியோரை 148 – 148, 143 – 148 மற்றும் 146 – 148 ஆகிய […]

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் உஸ்மான் கவாஜா விக்கெட்டை வீழ்த்த, வித்தியாசமான ஃபீல்டிங்கை அமைத்த பென் ஸ்டோக்ஸின் ‘ப்ரம்பெல்லா’ வைரலாகி வருகிறது. கிரிக்கெட்டில் பெரிதாக பேசப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் கடந்த ஜூன் 16 இல் இங்கிலாந்தின் பர்மிங்காமில் தொடங்கியது. உலகக்கோப்பை தொடரை போல் கருதப்படும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில், முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு […]

ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். சீனாவில் நடைபெறுகிற ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில், தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்று ஆசிய அளவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். காலிறுதியில் உலக சாம்பியனான மிஸாகி யமுராவை வீழ்த்திய பவானிதேவி அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் தோல்வியடைந்த நிலையில், வெண்கலம் பதக்கம் பெறுவதற்கு தகுதி […]

உலகக்கோப்பை தொடரில் ஆப்கனுக்கு எதிராக சென்னையில் நடைபெறும் போட்டியை மாற்ற பாகிஸ்தான் அணி கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 50 ஓவர் உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் இந்த வருடம் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் இதற்காக தயாராகி வருகின்றனர். மேலும் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளும் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சென்னையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்ற எதிர்பார்ப்பதாக […]

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 252 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் இவரின் சொத்து மதிப்பு 1,050 கோடி ரூபாயாகும் என்று “ஸ்டாக் குரோ” என்ற நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. விராட் கோலிக்கு தற்போது 34 வயதாகிறது. இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்த பட்டியலில் கோலி “ஏ பிளஸ்” பிரிவில் உள்ளார். அதனால், இவருக்கு ரூ.7 கோடி சம்பளமாக […]

காயங்களால் அவதிப்படும் இந்திய வீரர்கள் என்ற பட்டியல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அந்த வரிசையில் ரிஷப் பண்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் என்ற சொல்லிக்கொண்டே போகலாம். இந்திய அணியின் முக்கியவீரர்களாக பார்க்கப்படும் இவர்கள் அணியில் இல்லாதது பெரும் பின்னடைவாகவே இருந்துவருகிறது. அடுத்தடுத்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை தொடர் என முக்கியமான தொடர்கள் வரவிருக்கும் நிலையில், முக்கியமான வீரர்கள் அணிக்குள் இருக்க வேண்டியது கட்டாயமாக இருந்துவருகிறது. உலகக்கோப்பை தொடரில் […]

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் மலேஷியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி நேற்று ஜகார்த்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய வீரர்கள் சாத்விக், சாரக் ஆகியோர் இறுதிப்போட்டியில் உலக சாம்பியனான மலேஷியாவின் ஆரோன் சியா மற்றும் சோ வூய் யிகா ஜோடியை […]