தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ, இந்தியாவின் 25 வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். இந்தியாவில் நடந்த அகில இந்திய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த எரிக் ஹெட்மன்-ஐ வீழ்த்தி இந்தியாவின் 25வது மகளிர் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்றார்.இதன் மூலமாக இந்தியாவின் மிக குறைந்த வயதை கொண்ட கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவரின் தற்போதய வயது 15 என்பது குறிப்பிடத்தக்கது. […]

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்ற நிலையில், போட்டிக்கு முன் ரஹானேவை ஊக்கப்படுத்தியது குறித்து தல தோனி கூறியுள்ளார். ஐபிஎல் 16வது சீசனின் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 12-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் அந்த அணி 20 ஓவரில் வெறும் 157 ரன்கள் மட்டுமே அடித்தது. 158 ரன்கள் என்ற […]

2011ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு காரணமாக அமைந்த சிக்சர் விழுந்த மும்பை வான்கடே மைதானத்தில் அமையவுள்ள நினைவுச் சின்னத்திற்கான பணிகளை தல தோனி தொடங்கி வைத்தார். 1983ஆம் ஆண்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 276 ரன்கள் இலக்கை இந்திய அணி விரட்டியது. கவுதம் கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்த பின், அப்போதைய இந்திய […]

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுத்தியுள்ளது. நடப்பாண்டின் ஐபிஎல் 16வது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதன்படி, 10 அணிகளும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மைதானங்களில் விளையாடி வருகின்றன. இந்தநிலையில், இந்தியவில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ 10 ஐபிஎல் […]

விளையாட்டு வீரர்கள் பென்ஷன் பெறுவதற்கு ஏப்ரல் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 2023-2024 ஆம் ஆண்டிற்கான நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தினை சார்ந்த முன்னாள் தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளையாட்டுத் துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத […]

விராட் கோலியின் கையில் போடப்பட்டுள்ள புதிய டாட்டூவில் அடங்கியுள்ள ரகசியம் குறித்து டாட்டூ கலைஞர் விளக்கமளித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி தனது கையில் புதிய டாட்டூவை குத்தியுள்ளார், இந்த டாட்டூவை முடிக்க டாட்டூ கலைஞருக்கு கிட்டதட்ட 14 மணிநேரம் ஆகியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டாட்டூ கலைஞர் தெரிவித்ததாவது: இந்த டாட்டூ விராட் கோலி ஆளுமையின் ஒரு அம்சத்தை […]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுதிர் நாயக் காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுதிர் நாயக் மும்பையில் காலமானார். 78 வயதான அவருக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் […]

நியூசிலாந்து – இலங்கை இடையேயான ஆண்கள் டி20 போட்டியில் பெண் நடுவராக பங்கேற்றுள்ளார். ஆண்களுக்கான போட்டியில் பெண் நடுவர் பங்கேற்றது கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை ஆண் நடுவர்கள் மட்டுமே பங்கேற்று வந்துள்ளனர். ஆனால், முதன்முறையாக இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டியில் பெண் நியூசிலாந்தை சேர்ந்த கிம் காட்டன் ஒருவர் நடுவராக பங்கேற்றுள்ளார். நியூசிலாந்து மற்றும் இலங்கை […]

நோபால் மற்றும் வைடு வீசுவதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் வேறொரு கேப்டனின் தலைமையின் கீழ் தான் விளையாட நேரிடும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி கூலாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 16ஆவது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 6ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் ஆடிய சிஎஸ்கே […]

ஐபிஎல் போட்டிகளில் அதிகமுறை 200 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற சாதனையை எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்துள்ளது. அதன்படி, சென்னை அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளநிலையில், தற்போது 16வது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து அதிரடிக்கும் சரவெடிக்கும் பஞ்சமில்லாமல் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், ஐபிஎல் போட்டிகளில் […]