ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக மும்பை அணியின் நட்சத்திர வீரர் பொல்லார்ட் அறிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியதால் ரசிகர்கள் அனைவரின் கவனமும் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பியுள்ளது. பிசிசிஐ-ம் அதற்கேற்ற பணிகளை செய்து வருகிறது. அதாவது 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் மினி […]

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை இந்திய டி20 அணியில் சேர்க்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு டி20 உலகக்கோப்பையிலும் இந்தியாவின் பேட்டிங் அணுகுமுறை மிகவும் பயந்து ஆடுவதுபோல் இருந்தது. மற்ற டி20 தொடர்களில் இந்திய அணி நல்ல தொடக்கத்தை அளித்தது உண்மை என்றாலும், 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஓபனர்கள் ரோகித் சர்மா மற்றும் கேஎல் […]

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா உள்பட 25 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தாமற்றும் துப்பாக்கிச்சூடு வீராங்கனை இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட 25 பேருக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதை நவம்பர் 30-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்க உள்ளார். மிகவும் உயரிய விருதான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா […]

டி20 உலகக்கோப்பை போட்டியை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.12.98 கோடி தொகை பரிசு கிடைத்துள்ளது. 8-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய […]

இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் தொடங்கிய 8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. நேற்று நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த […]

பாகிஸ்தான் தோல்வியை அடுத்து சோயிப் அக்தரின் இதயம் வெடிந்த குறியீட்டை டுவீட் செய்ததற்கு இந்திய வீரர் ஷமி ’’இது தான் கர்மா’’ என்று பதில்கொடுத்துள்ளார். டி20 உலக கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்றது. மெல்போர்னில் மழை கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்டம் முடியும் வரை எந்த இடையூறும் ஏற்படாததால் சிறப்பான ஆட்டமாக அமைந்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. போட்டியில் பாகிஸ்தான் படு தோல்வியை சந்தித்த பின்னர் சோயிப் […]

இங்கிலாந்து அணியின் சாம்கரனுக்கு  ஆட்ட நாயகன் விருது தட்டிச்சென்றார். இங்கிலாந்து அணியின் வீரர் சாம்கரன் 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சாம்கரன் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதுவரை டி.20 12 சுற்று ஆட்டத்தில் சாம்கரன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. டி.20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய 9 வீரர்கள் இவ்விருதுக்கு தேர்வு […]

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதிய இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை தட்டிச் சென்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 138 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. முதலில் களம் இறங்கிய முகமது ரிஸ்வான் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 32 ரன்களும் முகமது ஹாரீஸ் 8 ரன்களும் ஷான் மசூத் 38 ரன்களும் […]

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில், இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதுவரை இந்த இரு அணிகளும் தலா ஒரு முறை டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மைய தகவலின் படி இன்றைய போட்டியின் போது மழைக்கு […]

டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 8-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில், முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2009-ம் ஆண்டு உலக […]